நினைவுகளை கொறித்துக் கொண்டிருக்கும்
தனிமை கணங்களுக்கு தீனி போடவாவது
தேவை புதிய நினைவுகள்
கிளம்பி போகமுடியாமல் காலெங்கும்
அப்பிக்கிடக்கிறது ஞாபக சிலந்திகளின்
நூலாம்படைகள்
சுவர்களில் வழியும் வக்கிரங்கள்
துரத்துகின்றன துர்நாற்றமென
தப்பிக்கும் வழிகள் தேடி
ஓடி அலைந்த இடமெல்லாம்
தனிமையின் வசிப்பிடம்.
தனிமை வசிக்காத இடமென்று
ஏதும் இல்லையென
அந்த அறையை
ஒழுங்கு செய்தேன்

- ஜனா கே

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.