ரெட்டைக்கிளவி அறியும்முன்னே
நானறிந்த ஓர் கிழவி
அன்பாலே பேரழகி
வெள்ளந்தி சிரிப்பிலே
அன்றலர்ந்த பூவழகி
ஏட்டுப்பாடம் படிக்கும்முன்னே
காட்டுப்பாடம் படிக்கவச்சா
மண்ணுவளம் இல்லையின்னா
மனுசபய இல்லையின்னு
மண்டையில ஏத்திவச்சா
சண்டையில வந்துநின்ன
கலப்புசாதி காதலைத்தான்
ஆணும் பெண்ணும் ஏத்துகிட்டா
சாதின்னு ஒண்ணுமில்லை
சாதின்னு பார்த்துவிட்டா
சமாதிக்கு மண்ணுமில்லைன்னு
சமத்துவம் பேசிநின்னா
பெரியாச்சி பெருங்கிழவி
மழைபெஞ்சு நின்னுதின்னா
மரத்துக்கெல்லாம் பொங்கல்வைப்பா
பூவுக்கெல்லாம் பூவைப்பா
எங்காத்தா பூவாத்தா
குலசாமி கதைசொல்லி
குழந்தைகள தூங்கவைப்பா
நிலாவைக் கூட்டிவந்து
என் கனவில் தூங்கவைப்பா
ஊரழகி உலகழகி வேண்டாண்டி
என் தங்கம்…
பிரபஞ்ச பேரழகி பேரனுக்கு
கட்டப்போறன்னு பூரிச்சுக்கிடந்தா
ஊர்கொஞ்சும் பழங்கிழவி
நான் கப்பலேறிப் படிக்கப்போக
காடுவித்து காசுதந்தா
நான் காசோட வருகையில
எமன் கயித்தோட வந்துநின்னான்
நீ சொர்க்கவாசல் தட்டத்தான்
நெய்ப்பந்தம் நான் வைத்தேன்
என் பந்தமாக நீயிருந்து
என் வாழ்விற்கு வாசல் வைத்தாய்
நான் பார்த்த பெண்களிலே
நீதானே பேரழகி
என் குழந்தைக்கு கதைசொல்ல
இனி யார்வருவார் சொல் கிழவி?
- ஜனா.கே (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
அருமையான படைப்பு...
வாழ்த்த்துக்கள்....
RSS feed for comments to this post