![voice](/literature/poems/images/voice_300.jpg)
நடுநாசி முற்றமேறி
கனவுக் கனல்வீசித்
தீய்ந்த என் விழிகளுக்குள்
தமிழமுதாய்ச் சிதறி
நாவடித் தேனூற்றுகளை
அதிரடியாய் உடைத்து
பட்டமரத் தேகமெங்கும்
பனிப்புல்லாய்ச் சிலிர்த்து
துயர் மேயும் இதயத்தின்
திறவாக் குகைக்குள்ளும்
தித்திப்புக் கனிரசமாய்
இறங்கி
வளர்முத்த வெறிகொட்டும்
உயிர் வெள்ள நயாகரா
- புகாரி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)