voiceகடுந்தாகச் செவிவிழுந்து
நடுநாசி முற்றமேறி

கனவுக் கனல்வீசித்
தீய்ந்த என் விழிகளுக்குள்
தமிழமுதாய்ச் சிதறி

நாவடித் தேனூற்றுகளை
அதிரடியாய் உடைத்து

பட்டமரத் தேகமெங்கும்
பனிப்புல்லாய்ச் சிலிர்த்து

துயர் மேயும் இதயத்தின்
திறவாக் குகைக்குள்ளும்
தித்திப்புக் கனிரசமாய்
இறங்கி

வளர்முத்த வெறிகொட்டும்
உயிர் வெள்ள நயாகரா

புகாரி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
Pin It