என்ன செய்ய..?

இன்ன பிற விஷயங்களென்றால்
இழுத்துப் பிடிக்க வேண்டியிருக்க

பெண் காதல் காமம் என்றால்
பெருக்கெடுத்து ஓடி வரும்

இந்த கவிதை வரிகளை
என்ன செய்ய?

கவன ஈர்ப்பு...

மற்றவர் கவனத்தை
ஈர்ப்பதுதான் முக்கியம்.

இன்னபிற
ஆயிரம் வழிகளில்
நீங்கள்

என் வரைக்கும்
எழுதிக்கொண்டிருக்கிறேன்
கவிதைகளை.

செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It