என் பிம்பம்
என்றுமில்லாத அளவில்
அதிக புன்னகையேந்தியிருக்கிறது
கண்ணாடிக் குடுவையினின்று
எட்டிப்பார்க்கும் ஊதாநிறப் பூக்கள்
கடைசியிதழ் வரையிலும்
மலர்ந்திருக்கின்றன
சுவரில் படர்ந்த அழகுக் கொடியில்
தலையாட்டிக்கொண்டிருக்கிறது
கிளையொன்றின் பிரியம்
அலமாரியின் புல்லாங்குழலின்
வழிந்தபடியிருக்கிறது நேசப் பாடலொன்று
திரைச்சீலையின் மெல்லிய அசைவுகளோடு
நீயும் நிலவும் உட்பிரவேசிக்கும் இப்பொழுதில்
உனையெழுதிய காகிதங்களின் படபடப்பில்
உயிர் பெறுகிறதென் காலம்!
- கோகுலன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- பா.ஜ.கவின் வீழ்ச்சியை வழிமொழியும் வட இந்தியா!
- பாலாற்று நீரில் தமிழ்நாட்டின் உரிமையைத் தடுப்போம்!
- பத்தாண்டுகளுக்குப் பின் பேரா. சாய்பாபா விடுதலை
- இன்னும் இரண்டரை மில்லியன் பூஞ்சைகள்
- 39 இனி 31 என்றாவதா?
- வாடிய மாலைகளிலும் வாசம் கமழ்த்தும் பூக்கள்
- தொடரட்டும்...!
- எளியவனின் நீதி
- இந்திய சட்டசபை
- கருஞ்சட்டைத் தமிழர் ஏப்ரல் 20, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- விவரங்கள்
- கோகுலன்
- பிரிவு: கவிதைகள்