தாவிக் குதித்து
சாலையை கடக்க முற்பட்டவன்
தலையில் தட்டி
பத்திரமாய் கடப்பது பற்றி
சொல்ல ஆரம்பித்தவனை
இடைமறித்து
எப்போதும் எங்கும்
தைரியம் வேண்டுமென்று
முன்பு நான் சொல்லியதை
எடுத்துக்காட்டி என்னையே
பார்த்துக்கொண்டிருந்தவனிடம்
பத்திரமும் தைரியமும்
பக்குவமாய் புரியும்படி
எப்படிச் சொல்வதென
யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

- செல்வராஜ் ஜெகதீசன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.