களத்துமேட்டில் கிளம்பும் புதுமணிநெல் வாசணை

குத்திப்புடைக்கையில் இரட்டித்துப்பரவும்

jayaprakash_dalitஎங்கள் அடுப்படியிலே வயித்துக்கஞ்சி

ஊரான அடிச்சி ஒலையில போடும்

உன் குணம் கைவரப்பெறாமலேயே உன்னிடம்

தோற்றுப்போகும் என் சமூகம்

நாளைக்குப் பூக்கவிருக்கும் அந்த

ஏரிக்கரையின் உயர்ந்த மரத்தில்

கமக்கும் மலர்கள் எங்கள் வெற்றியின் குறியீடு

அப்பொழுது கரிப்பூசப்படும் உங்கள் மூஞ்சில்

நாய் காலை தூக்கி நிற்கும்!

 

-ஜெயபிரகாஷ் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It