தேர்ந்த கலைஞனைப் போல்
வலைபின்னியிருக்கிறது சிலந்தி
அதன் பலமணி நேர உழைப்பை
ஒரு ஒட்டடை குச்சியின்
உதவியுடன்
பிரித்துப் போட
வந்து கொண்டிருக்கிறது
பண்டிகை திருநாள்
பண்டிகை கொண்டாட்டங்கள்
மகிழ்ச்சியோடு நகரும் வேளையில்
தப்பிய சில சிலந்திகள்
தொடரக்கூடும்
இன்னொரு மூலையில்
தன் உழைப்பை.
-ஆ.மீ. ஜவஹர் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
வாழ்த்துக்கள் உங்களுக்கும்,க விதைக்கேற்ற புகைப்படம் அமைத்த கீற்று ஆசிரியருக்கும்.
கி.சார்லஸ்
[email protected]
RSS feed for comments to this post