ஒரு ஆத்மார்த்த தீண்டலுக்காய்
More articles by சகாரா
- வாழ்வின் நிழல்கள் (23 ஏப் 2010)
- வெட்கம் (23 ஏப் 2010)
- ரகசிய விசும்பல் (23 ஏப் 2010)
- அன்பின் நிழல் (11 ஏப் 2010)
- கருநிற மழை (11 ஏப் 2010)
வருடக் கணக்கில் தவம்
கலைக்கப்பட்டதேயில்லை அது என்றுமே
யாராலும்..
அறை நிரப்பும் வெப்பக்காற்றை
அவளோடு சேர்ந்து சுவாசித்தறியும்
கட்டில் கம்பிகள்
ஜன்னலின் வழியே அவ்வப்போது தெரியும்
சின்னஞ்சிறு உலகம்
கனவில் மட்டுமே கரம் தொடும் மகன்
ஒளிந்து நின்று எட்டிப் பார்க்கும்
பேரக் குழந்தைகள்
தனியறை, தனிப்பொருள்கள்
துணையாய் தனிமை
இப்படியாய்
ஒட்டாமல் தான் இருக்கிறது
அவள் பாத்திரம் வீட்டினுள்
மனதிலும் தான்