இருவர் பேசிக்கொண்டிருந்த
More articles by செல்வராஜ் ஜெகதீசன்
- பத்திரமும் தைரியமும் (29 அக் 2010)
- பாதிப்பாதி (15 ஜூலை 2010)
- வாழ்வின் நிலைகளில் (21 ஜூன் 2010)
- பின் தொடரும் நிழல் (09 ஜூன் 2010)
- ஏற்புடையதாய்.. (15 ஏப் 2010)
இடத்தருகே
எதேச்சையாய் போய் நின்றேன்.
அப்படியே பேச்சு நின்று
அமல்படுத்தப்பட்டது அமைதி.
இன்னொருவனுக்கு
அனுமதியில்லாத
இருவரின் அந்தரங்கத்தின்
இடையே புகுந்ததறிந்து
வெறுமே சிரித்துவைத்தேன்
வேறெதுவும் தோன்றாமல்.
அவனவன் பாடு
கண்டு கொள்ளாமல்
இருந்திடல் கூடும்
சிலருக்கு.
கண்டு கொண்டாலும்
கைவசப்படுவதில்லை
சிலருக்கு.
கண்டதையும் கொள்வதிலும்
உண்டு
கணிசமான சிக்கல்கள்.