இருவர் பேசிக்கொண்டிருந்த
இடத்தருகே
எதேச்சையாய் போய் நின்றேன்.
அப்படியே பேச்சு நின்று
அமல்படுத்தப்பட்டது அமைதி.

இன்னொருவனுக்கு
அனுமதியில்லாத
இருவரின் அந்தரங்கத்தின்
இடையே புகுந்ததறிந்து
வெறுமே சிரித்துவைத்தேன்
வேறெதுவும் தோன்றாமல்.

அவனவன் பாடு

கண்டு கொள்ளாமல்
இருந்திடல் கூடும்
சிலருக்கு.

கண்டு கொண்டாலும்
கைவசப்படுவதில்லை
சிலருக்கு.

கண்டதையும் கொள்வதிலும்
உண்டு
கணிசமான சிக்கல்கள்.

- செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
Pin It