எங்கேயாகிலும் ஏதாவதொன்றை
எதிர்நோக்கியிருக்கையில்
சகித்துக் கொள்ள வேண்டியதாயிருக்கிறது

எதிர் இருக்கை தொணதொணப்புகளை..
கசகசத்து வழியும் வியர்வையை..
உரக்கப் பேசும் அலைபேச்சாளர்களை..
விஷமப் பார்வைகளை..
இப்படி ஏதாவதொன்றை

எது எப்படியிருப்பினும்,
காத்திருப்பின் முடிவில்
கிடைக்கப் பெறும் பதில்கள்
திருப்திகரமானவையாக இருக்கப் போவதில்லை
எப்போதும்.

- சகாரா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
Pin It