மாமர உச்சியிலாடும்
மாம்பூக்களில்
தேனுறுஞ்சிடும்
கருஞ்சிட்டுகளின் மீது
தழுவிடும் மாசி மாத
பனிவெயில்
மினுக் மினுக்கென்று மின்னுகிறது.
ஆழ்நிலை தியானத்தில்
மௌனிக்கும் தென்னை,
மா மரங்களில் சறுக்கி
விளையாடும் வெயில்
குருவிகளின் பாடலுடன்
வரைகிறது காற்றில் பகலை .
சுள்ளெனத் தாக்கி
இலை நுனியில் சொட்டும்
வெயிலுக்கு வேரைச்
சுற்றிலும் நிழலையே
சுரக்கிறது மரம்.
என்னுள் நீ சுரந்திருப்பது போலவே

- சதீஷ் குமரன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.