எல்லாத் துயரங்களையும்
கொஞ்சநேரம்
தனிமையின்
பரணிலிட்டு
இந்த நிலவொளியில் அமர்கிறேன்
ஆறுதலுரைக்கும் இரவின் சொற்களை மடியேந்த..
கடன் நிலுவையின் பாரத்தை
நோய்மையுற்றலின் மனவலியை
பணிச்சுமையின் ஆக்கிரமிப்பை
உறவுகள் தரும் துயரத்தையென
பரணிலிட்டவற்றின் பட்டியலை அடுக்கதலிலிருந்தும் சற்று இளைப்பாற
தேநீரின் ஆவியேறும் காற்றை
உள்ளிழுத்துக் காத்திருக்குமென்
கவனத்தில் புதிதாய் ஒரு சுமை சேர்க்கும் ஆவலில் எங்கோ தொலைதூரத்தில்
இருளை நீந்தியபடி
ஒலிக்கிறது
இணையைக் காணாத பறவையின்
இடைவிடாத ஓலம்.
- ந.சிவநேசன்
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
அண்மைப் படைப்புகள்
- ஆரியப் பார்ப்பனியப் பாசிசக் கருத்துகள் பொசுங்கட்டும்!
- குளிரூட்டும் ஆடைகள்
- பெண்களின் சமஉரிமைக்குத் தொடரும் போராட்டம்
- சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக வேண்டும்
- காலம் காட்டும் மேஜிக்
- மாறுவேடம்
- ஜஸ்டிஸ் பத்திரிகையின் நிர்வாகம்
- பா.ஜ.கவின் வீழ்ச்சியை வழிமொழியும் வட இந்தியா!
- பாலாற்று நீரில் தமிழ்நாட்டின் உரிமையைத் தடுப்போம்!
- பத்தாண்டுகளுக்குப் பின் பேரா. சாய்பாபா விடுதலை
- விவரங்கள்
- ந.சிவநேசன்
- பிரிவு: கவிதைகள்