பறந்து பறந்து
காட்டையே
தன் வசப்படுத்திடும்
பறவையாய்...

தண்ணீருக்குளிருந்தே
தன் தாகம்
மறந்து போன
மீனாய்...

மலையை
சிறுசிறு துகளாய்
பிரித்தெறிகிற
சிறு உளியாய்..

சிகரம்
தொட்டுத் திரும்புகிற
காற்றாய்..

ஒரு போலி
கம்பீரத்தில் தான்
அலைகிறேன்.

உப்பிப் பெருகுகிற
அவஸ்தையால்
நிரம்புவது போலிருக்கிறது
சுயம்!

கைபட்டும் மட்டுமல்ல
காற்று பட்டும் கூட
உடையக்கூடும்
நீர்க்குமிழி வாழ்க்கை!

- இசைமலர்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.