எதன் பொருட்டு
எனைத் தேடுவாய்?

பிடித்த பாடலை
பிடித்த கவிதையை
பிடித்த நிகழ்வை
பிடித்த மனிதர்களை
பற்றிப் பகிர்ந்திடவா?

அனிச்சையாய்
விழி திறவாது
விரலால்
தாயைத் துழாவித்
தேடுகிற மழலை போல்
எதன்பொருட்டு
எனைத் தேடுவாய்?

விசும்பலில்
தலை கோதிட,
விழி வழிநீர்
துடைத்திட
மௌன மொழி
பகிர்ந்திட
எதன் பொருட்டு
எனைத் தேடுவாய்?

- இசைமலர்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.