பஞ்சாலையில் பணிபுரியும்
அவள் மேனி முழுதும்
வெண்மேகமென
படர்ந்திருந்தது வெண்பஞ்சு.

பேருந்துவிட்டு இறங்குகையில்
உதிரிகளாய் சிதறிக் கிடந்தன
சில மேகத்துண்டுகள் ஆங்காங்கே.

வீடடைந்தவள் இடியென
அறைக்கதவைத் தாழிட்டபின்
அத்தனை நேரமும் பொறுமை காத்த அவள் விழிகள்
நிச்சயம் பொழிந்திருக்க வேண்டும்
அவளுக்கான பெருமழை ஒன்றினை.

- வான்மதி செந்தில்வாணன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.