snail

பனிக்குடத்திலேயே
பயின்று விட்டோம்
வாழ்க்கையில்
நீச்சலிடிப்பதற்கான
வித்தையை......


ஆயிரம்
விஞ்ஞானம்
வளர்ந்தாலும்
அறுத்தெறிய
முடிவதில்லை
நிலவில்
வடை போல்
சில
நம்பிக்கைகளை....


எல்லைக்குள்
அடைத்தாலும்
துவண்டுபோகாமல்
துள்ளிகுதிக்கின்றன
தொட்டி மீன்கள்......


சுமையென
நினைத்திருந்தால்
ஓட்டை
சுமந்துகொண்டும்
உயிர்வாழ்ந்து
கொண்டிருக்காது
நத்தை....


- மு.கெளந்தி

Pin It