கோடி புண்ணியம்
கிட்டியதேயில்லை
கோபுர வாசலிலேயே
தவமிருக்கும்
பிச்சைக்காரனுக்கு.......

____________

வலிகள் வழக்கமாகிவிட்ட
ஒன்றுதான்
எப்பொழுதோ வரும்
வசந்தங்கள் தான்
வலிக்க துவங்கிவிடுகிறது இப்பொழுதெல்லாம்........
____________


நாம் செய்யும் செயலுக்கு
நாம் எஜமானன் என்றால்
அந்த செயலின் முடிவுகளுக்கு
நாம் அடிமை..........

____________

வேரோடு
சாய்த்ததற்கு
நம்மை ஊரோடு
கூறுபோடுகிறது
வெயிலெனும்
வெட்டரிவாள்.........

- மு.கௌந்தி, சென்னை

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.