தானம் கொடுக்க
முன் கை நீண்டதும்
செல்பி எடுக்க
முழங்கையும்
நீண்டு விடுகிறது
தன்னிச்சையாக

நவீன கர்ணர்கள்......

------

ஒவ்வொரு வருடமும்
தவறாமல்
கரைந்துவிடுகிறார்
களிமண் பிள்ளையார்

கஷ்டங்கள் மட்டும்
கரையாமல்
அப்படியே பிடித்து வைத்த பிள்ளையாரைப்போல...

- மு.கௌந்தி

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.