grandfather and grandchildமுகம் போர்த்தி உறங்கிய
முந்தானைச் சேலையில்
பத்திரப்படுத்தி வைக்கிறேன்
என்
பிள்ளையின் வாசத்தை
___________

இன்று எழுதப்படும்
ஒவ்வொரு கதையிலும்
தவறாமல்
இடம் பெறுகிறாள்
கதை சொல்லவே
பிறந்த பாட்டி
___________

புலம்பெயர்ந்தவர்கள்
ஒவ்வொருவரிடமும் நீள்கிறது
தாயக எல்லைகளின்
வரைபடம்
___________

ஒரேயொரு முத்தத்தில்
அழித்தான் பேரன்;
தாத்தாவின் நெடுங்கால
வாழ்வின் வலியை

- ந.சுரேஷ், ஈரோடு

Pin It