உனக்கும் எனக்குமான 
இடைவெளியில் 
இடையில் நிற்கிறது மெளனம்; 
மௌனத்தை மொழிபெயர்க்கையில் 
வார்த்தையால் வசீகரிப்பதும் 
வாளால் வெட்டுண்டு போவதும் 
நிகழுமாகையால் 
விட்டு விடுகிறேன் 
சத்தக் கூடுகளின் சஞ்சாரத்தை விட 
மௌனமே 
மொழிகளில் சிறந்த மொழியென்று! 

- ந.சுரேஷ், ஈரோடு

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.