mother and childபுலம் பெயர்ந்தவர்கள்
தங்கள் நக இடுக்கில்
சுமந்து செல்கின்றனர்
தாய் மண்ணை
___________

யாரிடமும் அனுமதி
கேட்க வில்லை
காவல்துறை வளாகத்தில்
காக்கைகள் கரைய
___________

குழந்தைக்கு சோறூட்ட
இல்லாத பூச்சாண்டியை
உருவாக்கினாள் தாய்;
பூச்சாண்டிக்கும் சேர்த்து
சோறூட்டச் சொன்னது
குழந்தை

- ந.சுரேஷ், ஈரோடு

Pin It