தமக்கென்று எதையும் வைத்துக் கொள்ளாமல்
பொழிந்து போகின்றன மேகங்கள்
தமக்கென்று எதையும் வைத்துக் கொள்ளாமல்
கனிகள் தந்து வாழ்கின்றன மரங்கள்
தமக்கென்று எதையும் வைத்துக் கொள்ளாமல்
பயிர்களை உயிர்களை வாழ வைக்கின்றன நதிகள்
தனக்கென்று எதையும் வைத்துக் கொள்ளாத
தங்கத் தாரகையின் ஜொலிப்பில்
ஒளி(ர்)கிறது தமிழ் மண்.

- சேயோன் யாழ்வேந்தன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.