பிச்சைக்காரர்களின்
இம்சை
இல்லையென்ற
ஒன்றைத் தவிர்த்து
வேறொன்றுமே
இல்லை
இந்த
அடுக்குமாடிக் குடியிருப்பின்
ஏழாவது மாடியில்.
 
----------------------------------
இரவு பத்து மணிக்கு
காலாற
மொட்டை மாடியில்
நடந்து கொண்டிருக்கும்
எனக்கும்
நான்காவது மாடி
வீட்டுக்காரருக்கும்
ஒரே சிந்தனை
இந்த நேரத்தில்
இவன் இங்கே
என்ன செய்து கொண்டிருக்கிறான்?
 
- எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ

More articles by எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.