பிச்சைக்காரர்களின்
இம்சை
இல்லையென்ற
ஒன்றைத் தவிர்த்து
வேறொன்றுமே
இல்லை
இந்த
அடுக்குமாடிக் குடியிருப்பின்
ஏழாவது மாடியில்.
 
----------------------------------
இரவு பத்து மணிக்கு
காலாற
மொட்டை மாடியில்
நடந்து கொண்டிருக்கும்
எனக்கும்
நான்காவது மாடி
வீட்டுக்காரருக்கும்
ஒரே சிந்தனை
இந்த நேரத்தில்
இவன் இங்கே
என்ன செய்து கொண்டிருக்கிறான்?
 
- எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ

Pin It