புனிதமென்று இப்போது சொல்லுவதை

புசித்தபடிதான் இம்மண்ணில் நுழைந்தனர்

புனிதமென்று சொல்லும் நதியை

பிணக்காடாக்கினர்

புனிதமென்று சொல்லும் மண்ணை

மலடாக்கினர்

புனிதமென்று சொல்லும் நாட்டை

விலைபேசினர்

மனித உயிரும் புனிதமென்று 

அவர்கள் சொல்லும்வரை

பொறுமையுடன் காத்திருங்கள்!

- சேயோன் யாழ்வேந்தன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.