man 300கொல்லப்படுபவனும்
கொல்பவனும்
ஒருவனே -
உங்கள் தத்துவங்கள்
லேசாகப் புரிய ஆரம்பித்துவிட்டன.
கொல்பவனின் கைகளில்
ஆயுதமாய் இருந்தவன்
கொல்லப்பட்டவன்தான்.

கொல்லப்பட்ட என் மீது
கொல்லப்பட்ட பின்பு
நீங்கள் காட்டும் கருணை
மீண்டும் கொல்கிறது.

-    சேயோன் யாழ்வேந்தன் 

Pin It