அரூபக் குரலோடு
பின் மதியச் சாயல்
மெல்ல நகர்ந்து
வீதி தாண்டி, முகம்
திருப்பி கூன் நடையோடு
மறைந்து விடுகிறது
கிழவியின் திண்ணையில்
கண் அசந்த
அசலூர்க்காரியின் கனவு...

- கவிஜி

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.