man head

பரம ஏழை
இவன் திருடியிருப்பான்
பரம்பரைப் பணக்காரன்
எதுக்குத் திருடுவான்?
வெள்ளையாய் இருப்பவன்
பொய் சொல்ல மாட்டான்
என்பது போல்
கொள்ளையடிப்பதிலும்
நம்பிக்கைகள்
திருடியதால் தான்
அவன் பணக்காரனாய் இருப்பதையும்
திருடத் தெரியாததால்
இவன் ஏழையாய் இருப்பதையும்
தெரிந்துகொள்ளாமல்...

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.