man head

பரம ஏழை
இவன் திருடியிருப்பான்
பரம்பரைப் பணக்காரன்
எதுக்குத் திருடுவான்?
வெள்ளையாய் இருப்பவன்
பொய் சொல்ல மாட்டான்
என்பது போல்
கொள்ளையடிப்பதிலும்
நம்பிக்கைகள்
திருடியதால் தான்
அவன் பணக்காரனாய் இருப்பதையும்
திருடத் தெரியாததால்
இவன் ஏழையாய் இருப்பதையும்
தெரிந்துகொள்ளாமல்...

Pin It