எது பற்றியும்
பேசவேண்டாம் நீ
எதற்கானவள் நான் என்று
எனக்குத் தெரிந்தால் போதும் ....
புல்லெனப் பூத்துச் சிரிப்பவளோ
கள்ளியில் இருந்து வடியும் பால் போன்றவளோ
அறிவு ஜீவியோ அரைப் பைத்தியக்காரியோ...
கடந்து போகும் நீ
கற்பித்துச் செல்லவேண்டாம்
நான் யாரென எனக்கு ....
தீயென எரியவும்
திசைகள் அற்றுப் பரவவும்
பறவைக்கு இறகெனவோ
பறைக்கு இசைஎனவோ
இருந்து விட்டுப் போகிறேன் ...
செம்புக்குள் அடைத்து வைத்துப்
பாதுகாத்தேன் நான் என
நீ பதக்கம் தேடி அலையாதிரு....
- சாயா சுந்தரம்