என் சாம்பல் என்னுடனே இருக்கட்டும்
அதிலிருந்து பூக்கள் பூக்கட்டும்
அது வாசமற்றோ
அதீத வாசனையுடனோ இருக்கட்டும்
என் சாம்பலில்
உன்னைத் தேடாதே
உன் போதனைகளைத் தேடாதே
உன் மந்திரக்கதைகளை கேட்டு
இந்த உடல் வளர்ந்திருக்கலாம்
அதெல்லாம் காற்று
வீசும் போது உதிர்ந்து விட்டன
நான் தனியாகத்தான் அழுதுகொண்டிருந்தேன்
நான் தனியாகத்தான் உழைத்துக்கொண்டிருந்தேன்
நான் தனியாகத்தான் மலை உச்சிக்கு ஏறிக்கொண்டிருந்தேன்
நான் தனியாகத்தான் போராடிக்கொண்டிருந்தேன்
அப்பொழுதெல்லாம் நீ வரவில்லை
நான் பெரும் பள்ளத்தில் உருண்டு விழுந்த போது
நீ வரவில்லை
என்னை தூக்கிவிட ஏதோவொரு கரத்தை
எதிர்பார்க்கும் போதும் வரவில்லை
இப்பொழுது வந்திருக்கிறாய்
உன் கடவுளோடு
எனக்குத் தெரியும்
இந்த பூனைக்குட்டிக்கு
என் வீட்டில் என்ன வேலையென்று.
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- ‘குடிஅரசு’க்கு வயது 100
- இடஒதுக்கீட்டின் எதிரி ஆர்எஸ்எஸ், பாஜக அடிபணிந்தது!
- நிலை தடுமாறும் நீலகிரி
- திருப்பூர் சங்கீதா மீது பொய் வழக்கு - குற்றவாளிகளுக்கு துணைபோகும் காவல் ஆய்வாளர்
- கௌரவ விரிவுரையாளர்கள் வாழ்வு, விடியலைப் பெறுமா?
- “திராவிட புரட்சிக் கவி” பாரதிதாசன்
- பிராகிருத நாடகத்தில் தென்னிந்தியக் குறிப்புகள்
- பிரளயம் தோன்றிடுமே!
- பார்ப்பன பத்திரிகைகளும் சர். ஷண்முகமும்
- பெரியார் முழக்கம் மே 02, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- விவரங்கள்
- கோசின்ரா
- பிரிவு: கவிதைகள்
RSS feed for comments to this post