என்னைப் பற்றி சொல்லத் தயங்குகின்றேன்
என்னுடைய தவறல்ல
ஆக்கி வைத்திருக்கிறார்கள்
வெளிப்படையானவன்
வெளிப்படையை கேலி செய்தவர்களே
தயக்கத்தை உருவாக்கினார்கள்
பொய் சொல்ல வில்லையென்று
அவர்களுக்குத் தெரியும்
மெளனமாக இருப்பதைப் பாருங்கள்
இது போல கடந்து போன மெளனங்களில்
எத்தனையோ நியாயங்கள் சூறையாடப்பட்டன
காத்திருந்தோம் பொறுமையாக
பத்தொன்பதாம் நூற்றாண்டு வரைக்கும்
எங்களுக்கென்று வலிமையான
நாக்குகள் முளைக்கும் வரைக்கும்
அந்த நாவுகள் பேசத்தொடங்கின
பள்ளிக்கூடங்களில்
எங்கள் கால்களுக்கு இடம் கிடைத்தன
அவர்கள் பயந்தார்கள்
கூடாரம் காலியாகிவிடுமென்று
கேள்விகள் அவர்களை நெருக்குமென்று
கேள்வி கேட்டோம்
சிரிப்பொலிகளும் சிந்தனைகளுமாய்
வெளிப்பட்டோம்
இந்த நாட்டின் சட்டத்தை இயற்றும்
நிலைக்கு வந்து நின்றோம்
எங்கள் நேர்மையை சந்தேகிக்க இயலுமா
எங்கள் திறமையை சந்தேகிக்க இயலுமா
நாங்கள் இப்போது பாடவில்லையெனில்
இனி எப்போதும் பாட முடியாமல் போகலாம்
எங்கள் பாடல்களை உரக்கப் பாடுகிறோம்
எங்கள் உரிமைகளைப் பற்றி
இழந்த நிலங்களைப் பற்றி
உங்கள் துரோகங்களைப் பற்றி…
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
அண்மைப் படைப்புகள்
- கடவுள், மதம் ஒழிந்தால்தான் ஜாதி ஒழியும்!
- சாதித்தார் ஸ்டாலின்! இது சொல்லாட்சியல்ல, செயலாட்சி!
- முனீஸ்வரன்
- அன்னை நாகம்மையார்: பெரியாரின் மனைமாட்சி
- ரிசல்ட் வரும் நாள்
- நதியைக் கொன்றவர்கள்
- நமது தலைவர் ஈ.வெ.ராவும் சென்னை பார்ப்பனரல்லாதார் மகாநாடும்
- கருஞ்சட்டைத் தமிழர் மே 11, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- மக்களை நோக்கி அறிவியல் எனும் ஓர் அறிவியக்கம் உருவாக்கப்பட வேண்டும்
- டிராக்டர்கள் மீண்டும் டெல்லி வந்துள்ளன
- விவரங்கள்
- கோசின்ரா
- பிரிவு: கவிதைகள்