ஊருக்கு ராஜா என்றாலும்
பார்பர் ஷாப்பில்
அவன் சாமானியன்தான்.
_____________________
தாத்தா இல்லாத கைத்தடியருகே
நெருங்குவதும் விலகுவதுமாயிருக்கின்றன
சிட்டுக்குருவிகள்.
_____________________
மொட்டைப் பாறையில்
தன் துளிகளை விதைத்தது
மழை.
______________________
தாமதமான அப்பாவிற்காய்
பக்கத்து வீட்டு அழைப்பு மணிக்கும்
கதவு திறக்கிறாள்
அம்மா.
________________________
எழுதப்படாத வெள்ளைத்தாளில்தான்
எல்லாமே
ஒளிந்திருக்கின்றன.
__________________________
ஒரு ஹைக்கூவிலிருந்தே
தங்களைத் துவக்குகிறார்கள்
எல்லா எழுத்தாளர்களும்.
- எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ
தாத்தா இல்லாத கைத்தடியருகே
நெருங்குவதும் விலகுவதுமாயிருக்கின்றன
சிட்டுக்குருவிகள்.// கவிநயம் தளும்புகிறது
RSS feed for comments to this post