bird 309மரங்களின் நேசம்
கற்றுக் கொடுத்திருக்கலாம்
சிறகுகள் உதிர்ப்பதை
பறவைகளுக்கு,
இலையைப்போல.

...

வேர்களை நம்பிப்
பயனில்லை
விழுதுகள்.

...

கூடுகட்ட அனுமதி
கேட்பதில்லை
மரங்களிடம்
பறவைகள்.

...

மகிழ்வுடனே
விலைபோயின
குழந்தைகளிடம்
பொம்மைக்காரனின்
பொம்மைகள்.

...

புழுவின் ஈர்ப்பில்
தூண்டிலில் சிக்கி
கரையில் கிடந்த மீன்
வாயைத் திறந்து திறந்து
விடுத்த எச்சரிக்கை
எட்டவில்லை
மீதமுள்ள குளத்து மீன்களுக்கு

...

தோண்டிய
இடத்திலேயே
புதைக்கவும் செய்யப்பட்டது
கிணறு.

- மகிவனி

Pin It