கலவி முடித்து
திரும்பி புரளுகையில்
படுக்கை விரிப்பில்
ஆடவனும் பெண்டிரும்
சிந்தவிட்ட காதல்
மல்லாந்து கிடக்க
மலைத்தெழுகிறது இரவு..!

குஞ்சொன்று..
நடுவில் கொஞ்ச
கூர்தீட்டப்படும் நாட்கள்
ஒவ்வொன்றும் வெட்கத்தின்
விரல்கள் தாங்கி நகர..!

பின்னோக்கி நகர்ந்த
பிரசவஅறை
அவனின் அடிநாதத்தோடு
அவள் யோனியை பதம்பார்த்து
தொப்புள்கொடி தேடி
தீர்க்கிறது யதார்த்தத்தை..!

அப்பா உள்ளங்கையில்
பொத்தி வைத்திருந்த விழிகளை
அம்மா கன்னங்களில் கொட்ட
ஆழ்ந்த நித்திரை முறிபட்டு
உயிர்பெறுகிறது தொட்டில்..!

ஆறுமுகம் முருகேசன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.