**************************************
இரண்டு மாதங்களுக்கு
முன்னொரு நாளிலிருந்து
எங்கள் வீட்டிலொரு
பறவை வசிக்கிறது
பகலில் தூங்கி
இரவில் விழிக்கிற
பறவை அது 

00 

பறக்கும்போது
சிக்கிப் பலியாகிவிடுமென்பதால்
காற்றாடியைப்
பயன்படுத்தமாட்டோம்
வழிதவறி
வெளியே சென்றுவிடுமென்று
கதவு ஜன்னல்களைக்
கவனமாகத் தாழிட்டுவிடுவோம்
அதன் எச்சம்
படுவதைத் தவிர்க்க
போர்வைக்குள் ஒளிந்துகொள்வோம்... 

00 

அலுவலகம் செல்ல
ஆறுமணிக்கு
எழுந்து குளிக்கிற நண்பன்
அதன் சேட்டைகளைப்பற்றி
நிறையச் சொல்வான்
நான் எழுகின்ற நேரத்தில்
நன்றாக
உறங்கத்தொடங்கிவிடும்

நாவிஷ் செந்தில்குமார் 

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.