தலைக்கவசம் அணியாத  
இருசக்கர வாகனக்காரன்   
தண்ணீர் உந்து ஓட்டுநரின்
தாறுமாறான கைங்கர்யத்தால் 
திருஷ்டிபூசணி போல்  
தலை நசுங்கி உயிர்விட
காவு வாங்கிவிட்டதாக  
வீண்பழி விழுந்தது,
பனைமரத்துப் பட்சிகள் 
புளிச்சென  எச்சமிடும் 
பைபாஸ் கருப்பணசாமியின்  
வீச்சமெடுத்த உச்சந்தலை மீது!

- ஸ்ரீதர்பாரதி

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.