என்
வார்த்தைகளில்
சில உண்மைகள் ஒளிந்திருக்கின்றன
நீங்கள் ‘ர்’ மற்றும் ‘த்’
பற்றி மட்டுமே கேட்கிறீர்கள்
அதையும் புரிந்து கொண்டீர்களா
எனத் தெரியவில்லை
o
அவரைப்போல் எழுதுவதில்
எனக்கென்ன தனித்துவம் இருக்கிறது
என்றான் நண்பனொருவன்.
அவரைப்பற்றியே இவர்களுக்கு தெரியாத பொழுது
தனித்துவம் என்ன வேண்டியிருக்கிறது.
தலைமுடி.
o
என் கல்லறைக்கு வருபவர்களிடம்
எழுந்து ஒன்று கேட்க வேண்டும்
நான் உயிரோடு இருக்கையில்
நீங்கள் ஏன் வரவில்லை?
o
கவனம் தவறி
புத்தகத்தில் சிறைபட்ட
ஈயொன்று
எத்தனை பக்கங்கள் படித்திருக்கும்?
- லதாமகன்
RSS feed for comments to this post