கடினமான வேலை
கடிந்துகொண்ட மேலாளர்
எப்போதுமில்லாத
உடற்சோர்வு என
எதுவுமே சரியில்லை...
காரணமென்னவென யோசிக்கையில்
காலையில் குறுக்கே சென்ற
கறுப்புப் பூனை
கண் முன்னே வந்தது...
வீடு வந்ததும்
எதிர்வீட்டுப் பூனை
இறந்ததுபோனதென
அறைநண்பன் சொன்ன செய்தியால்
'காலையில் என் முகத்தில்தான்
முதலில் விழித்ததோ?' என்ற
கேள்வி எழுந்தது

-நாவிஷ் செந்தில்குமார்

 

Pin It