அவசரத்தேவை
வேறு
வழியேயில்லை.
தேடிச் சென்ற
நண்பன்
நாசூக்காய்
கைவிரிக்க..
உறவுகள்
உதட்டைப்
பிதுக்க..
பழகிய சில
இடங்களில்
'பழைய பாக்கியே
இன்னும்..' என
இழுக்க..
ஏதோ ஒரு
பேருந்தில்
ஏறி அமர்ந்தேன்.
நல்லவேளையாய்
காசு இருந்தது
டிக்கெட்டுக்கு.
நெஞ்சு வெடித்து
விடக் கூடாதென
அஞ்சு வரி
அதன் பின்னே
நுணுக்கி எழுதி
'அவமானம்' எனத்
தலைப்பிட்டேன்.
அழகாய் வந்திருக்க
ஆறியது சற்றே
மனசு..
கைமாத்தாகக்
கவிதையாவது
கிடைத்ததே என்று.
- ராமலக்ஷ்மி, பெங்களூர்
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- ஆரியப் பார்ப்பனியப் பாசிசக் கருத்துகள் பொசுங்கட்டும்!
- குளிரூட்டும் ஆடைகள்
- பெண்களின் சமஉரிமைக்குத் தொடரும் போராட்டம்
- சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக வேண்டும்
- காலம் காட்டும் மேஜிக்
- மாறுவேடம்
- ஜஸ்டிஸ் பத்திரிகையின் நிர்வாகம்
- பா.ஜ.கவின் வீழ்ச்சியை வழிமொழியும் வட இந்தியா!
- பாலாற்று நீரில் தமிழ்நாட்டின் உரிமையைத் தடுப்போம்!
- பத்தாண்டுகளுக்குப் பின் பேரா. சாய்பாபா விடுதலை
- விவரங்கள்
- ராமலக்ஷ்மி
- பிரிவு: கவிதைகள்
விடக் கூடாதென//
ஏமாற்றத்தின் வலியினை மறக்க
ஏதோ ஒன்று அவசியப்படுகின்றது,
சிலருக்கு சில நேரங்களில் கவிதையாக,
சிலருக்கு சில நேரங்களில் உணர்வற்ற மெளனமாக.
நல்ல கவிதை மேடம்.
RSS feed for comments to this post