26ம் மாடியிலிருந்து தீவைத்துக்
கொண்டு கீழே குதித்தவள்
இன்னும் கொன்று கொண்டிருக்கிறாள்
புன்னகையெங்கும் வழிகிறது
வென்றுவிட்டதின் இறுமாப்பு
மரணம் நிகழ்தலின் சாபங்கள் தெரியாமல்
வாழமுடியாதவனுக்கான வரமென
நினைத்துக் கொண்டவளை பார்த்தால் சொல்லுங்கள்
வாழ முடியாதவனுக்கு
வாழ்க்கை தவிர எதுவுமே வரமில்லை.
 
- லதாமகன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.