வழிதடங்கள் நிரம்பிய இப்பெரும்பாலையில்
பெய்தொழியும் ஒருசில மழைக்கால மாலைகள்
வசிப்பிடம் கொய்யும் எங்கள்போலுள்ள
பரதேசிகளின் புருவங்களோரமாய்
கண்கட்டி வித்தை செய்தாற்றுகிறது
காதலையும், வாழ்வினையும்.

பின் வெயில் தொடங்குமொரு
முதல்காலையின் பரந்த தரைபரப்பு
மணற்துகள்களை வீசி ஆசிர்வதித்து
கானல் நீராகி யொழுகுகிறது
வாழ்வெனப்படுவது
வாழ்தலின் பொருட்டு வாழ்தலென

- ஆறுமுகம் முருகேசன்

Pin It