வழிதடங்கள் நிரம்பிய இப்பெரும்பாலையில்
பெய்தொழியும் ஒருசில மழைக்கால மாலைகள்
வசிப்பிடம் கொய்யும் எங்கள்போலுள்ள
பரதேசிகளின் புருவங்களோரமாய்
கண்கட்டி வித்தை செய்தாற்றுகிறது
காதலையும், வாழ்வினையும்.

பின் வெயில் தொடங்குமொரு
முதல்காலையின் பரந்த தரைபரப்பு
மணற்துகள்களை வீசி ஆசிர்வதித்து
கானல் நீராகி யொழுகுகிறது
வாழ்வெனப்படுவது
வாழ்தலின் பொருட்டு வாழ்தலென

- ஆறுமுகம் முருகேசன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.