*
அப்படியொரு சாயலை
இதற்குமுன் எழுதியதில்லை
நெளியும் புன்னகையில் துளிர்க்கிறது விஷ வன்மம்

எதிர்ப்பட்டு கடக்கும் நொடியை
நூறுத் துண்டுகளாய் நறுக்கத் தோன்றுகிறது
வாய்ப்பதில்லை ஒரு நிமிடம்

நொறுங்கும் அகாலத்தின் வெறுமையை
நின்று கவனிக்கும் பொறுமை இழக்கப் பழகுகிறேன்
எழுது விரல் ரேகைகளை நெருடி நீவி

உருகி வழியும் வெயில் நீரைப் பருக நீளும் நாக்கில்
கரைகிறது அவசரமாய் உனது பகல்

பொசுங்கும் நின வாடை மௌனமொன்று
நாசிக்குள் நுழைந்து வெளியேறுகிறது
தகிக்கும் கானலில் மிதந்தபடி

அப்படியொரு சாயலை எப்போதும் எழுதியதில்லை
வேறொன்றாய் அமிழ்கிறது
சதுப்பென குழையும் நினைவில் ஒவ்வொன்றாய்

*******
--இளங்கோ ( இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். )

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.