இஸ்லாம் மதப்படி இறைவன் முன் அனைவரும் சமம். ஏழை, பணக்காரன், இருப்பவன், இல்லாதவன், நாடோடி, மன்னர் யாரானாலும் எந்தப் பதவியில் இருந்தாலும் அனைவரும் இறைவன் முன் சமம். இஸ்லாத்தில் தீண்டாமையும் இல்லை. ஆனால் மனிதர்கள் தீண்டாமை சுவரை எழுப்பிக்கொண்டிருக்கிறார்கள். சுடுகாடு, இடுகாடு என இந்துக்கள் ஒவ்வொரு சாதிக்கும் தனித்தனியாக சுடுகாடு வைத்துள்ளார்கள். ஒரு சாதியினரின் மயானத்தில் மற்ற சாதியினர் உடலை எரிக்கவோ, அடக்கவோ அனுமதி கிடையாது. இதே போல கிறிஸ்தவ மதத்திலும் ஆர்.சி., சி.எஸ்.ஐ.என பல பிரிவுகளும் அவர்களுக்குத் தனித்தனியாக கல்லறைகளும் உண்டு. ஆனால் இஸ்லாம் மதத்தில் எந்த மனிதன் இறந்தாலும் அதனை பள்ளிவாசலுக்குச் சொந்தமான மையவாடியில் (கபர்ஸ்தான், மையத்தாங்கொல்லை, கபூர்ஸ்தான்) அடக்கம் செய்வது தொன்று தொட்டு நடைபெறும் வழக்கம்.
சமீபகாலமாக திருமணத்தின்போதும், இறப்பின்போதும் அடக்குமுறைகள் பள்ளிவாசல் நிர்வாகிகளால் கையாளப்பட்டு வருகிறது. நபி வழித்திருமணம் என்றால் ஜமாஅத் திருமண பதிவேட்டை தரமறுப்பதும், வஹாபி, நஜாத் என பல பெயரிட்டு அவர்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் மையவாடியில் அடக்க இடம் கொடுப்பதும் தமிழகத்தில் ஆங்காங்கே பல்வேறு பிரச்சினைகளை உண்டு பண்ணுகிறது. இதே போல ஜமாஅத் கட்டுப்பாட்டையோ அல்லது ஜமாஅத் அமைப்பிலிருந்து விலக்கி வைத்தவர்களையோ அல்லது விலகிக்கொண்டவர்களின் குடும்ப உறவுகள் இறந்தால் பொதுமையவாடியில் அடக்கம் செய்ய அனுமதி மறுக்கப்படுகிறது. இதற்காக இறந்த உடலை வைத்துக்கொண்டு மாவட்ட ஆட்சியர் முதல் மாவட்ட கண்காணிப்பாளர் வரை பஞ்சாயத்து பேசி அதன் பின்னர் சமாதானம் செய்து அடக்கம் செய்யும் நடைமுறை இன்றளவும் ஆங்காங்கே உள்ளது. இதற்கு நிரந்தர தீர்வு கொள்ள தமிழக அரசோ, முஸ்லிம் அமைப்புகளோ, இஸ்லாமிய கட்சிகளோ நடவடிக்கை மேற்கொள்ளவில்லை.
நாகப்பட்டினம் மாவட்டம், நாகூர் தர்காவில் இரண்டு மையவாடிகள் உள்ளது. அதில் ஒரு மையவாடியில் தர்காவின் பரம்பரை என அழைக்கப்படும் சாஹிபு மார்கள் மட்டுமே அடக்கம் செய்யும் உரிமை உள்ளது. மற்றவர்கள் மரைக்காயர், லெப்பை, தக்கினி, ராவுத்தர்கள் போன்றவர்கள் அடக்கம் செய்ய அனுமதி கிடையாது. இதே போல மதுரை மாவட்டம், சோழவந்தான் தாலுகாவில் உள்ள கீழமாத்தூர் உள்பட பல கிராமங்களில் ஜமாஅத் தலைவர்கள் மற்றும் அந்த ஊரால் பணக்காரர்கள் என நிர்ணயம் செய்யப்பட்டவர்களுக்கு ஒரு மையவாடியும், பணம் இல்லாதவர்கள் அல்லது ஏழை என அடையாளப்படுத்தப்பட்டவர்களை அடக்கம் செய்ய ஒரு மையவாடியும் வைத்துள்ளார்கள்.
சாதி அமைப்பில்லாத, சகோதரத்துவத்தைப் போதிக்கும் ஒரு மார்க்கத்தில் இறப்பின்போது, இறந்தவர்களின் உறவினர் துக்கதில் இருக்கும்போது, இறந்தவர்கள் உடலைப் புதைக்க அனுமதி மறுப்பது ஒரு வகை மனித உரிமை மீறலே. இத்தகைய மனித உரிமை மீறலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.
- வைகை அனிஷ் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
சமரசம் உலாவும் இடமே
ஆண்டியும் இங்கே அரசனும் இங்கே
அறிஞனும் இங்கே அசடனும் இங்கே
ஆவி போனபின் கூடுவார் இங்கே
ஜாதியில் மேலோர் என்றும்
தாழ்ந்தவர் கிழோர் என்றும் பேதமில்லாது
எல்லோரும் ஒன்றாய் இங்கே உறங்குவதாலே-ஆதல ினால்
நம் வாழ்வில் காண சமரசம் உலாவும் இடமே!
இந்த பாடலுக்கு பொருத்தமாக உள்ள அடக்கஸ்தலம் முஸ்லிம்களின் போது கபர்ஸ்தான் மட்டுமே.மற்ற மதங்களில் ஜாதிகளுக்கு தகுந்தவாறு தனித் தனி இடமிருக்கும்.பள ்ளனையும்,பார்ப் பானையும் பக்கம் பக்கம் வைக்க முடியாது.கிருஸ் துவ மதத்தில் பாதிரிகளுக்கு தனி இடம் பாமரனுக்கு தனி இடம்.
இன்று முஸ்லிம்களுக்கு மத்தியில் இந்த பிரச்சினை எழுவதற்கு யார் காரணம்? சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு உயர்கல்வி கற்க சவூதி அரேபியா சென்று திரும்பிய முல்லா புரோகிதர்கள் “தவ்ஹீத்” ஏகத்துவம் என்ற கோசத்தை கிளப்பி கூட்டம் சேர்த்தார்கள்.த வ்ஹீத் என்றால் ஒரு இறைவனான அல்லாஹ் வை மட்டும் வணங்குபவன் என்று பொருள்.
இஸ்லாத்தை தன் வாழ்வியலாக ஏற்றுக்கொண்ட ஒவ்வொரு முஸ்லிமும் தவ்ஹீதுதான்.முஸ ்லிம் என்றாலே ஒரு இறைவனுக்கு சரணடைந்தவன் என்றுதான் பொருள்.
இந்த புரோகித முல்லாக்கள் தங்கள் சுயநலனுக்காக தவ்ஹீதை சொல்லி தனிக்கூட்டம் சேர்த்தார்கள்.
காலம் காலமாக ஊர் முஸ்லிம்கள் ஒற்றுமையாக ஒரு முஸ்லிம் கூட்டமைப்பில் ஜமாஅத் தலைமையின் கீழ் இருந்து வருகின்றனர். இந்த ஒற்றுமைக்கு வேட்டு வைத்து சமூகத்தை பலவாறாக பிரித்து அரசியல் இயக்கங்களாக மாற்றியதும் அல்லாமல் பாரம்பரிய பள்ளியில் தொழுதால் உங்கள் வணக்கங்கள் இறைவனால் ஏற்றுக்கொள்ளப் பட மாட்டாது.
ஆகவே நாங்கள் கட்டிய புதிய பள்ளிக்கு வர ஆணையிட்டார்கள்.
அப்பாவி இளைஞர்களும் ஆட்டு மந்தையாய் பின் தொடர்ந்தனர்.
பிறகு திருமணம் சம்பந்தங்களை இவர்களோடு செய்யக்கூடாது.ப ெற்றோரே ஆயினும் அவர்களை புறக்கணியுங்கள் .குருதி உறவா? கொள்கை உறவா? என்று கூறி கொம்பு சீவி விட்டனர்.
ஒன்று பட்ட முஸ்லிம் சமூதாயத்தை பலவாறாக கூறு போட்டு ஓடிப்போன புரோகிதர்கள் இன்று அவர்களில் இறந்த மக்களை பாரம்பரிய பள்ளி அடக்கஸ்தலத்தில் அடக்க இடம் கொடுக்க வேண்டும் என்று கோருவதில் அர்த்தமுண்டோ? தனிப்பள்ளி தனிக்கூட்டம் சேர்த்ததுபோல் தனி அடக்கஸ்தலம் கட்டிக்கொள்வதுத ான் நேர்மை.உயிருடன் இருந்தபொழுது ஒற்றுமையை சிதைத்து சின்னாபின்னமாக் கி இறந்தவுடன் பிணத்தில் ஒற்றுமையை எதிபார்ப்பது நியாயமா?
நாகூரில் தனித்தனி அடக்கஸ்தலம் இருப்பதாக கட்டுரையாசிரியர ் குறிப்பிட்டுள்ள ார். நாகூரில் மட்டும் அல்ல இந்தியாவெங்கும் இப்படி உள்ளது.இறைநேசர் கள் என்ற அவுலியா நல்லடியார்கள் என்று சொல்லி சிலருக்கு தனி அந்தஸ்து கொடுத்து பிரைவேட் அடக்கஸ்தலத்தில் புதைத்து அதில் கட்டடம் கட்டி “நமனை விரட்ட மருந்தொன்றிக்கு து நாகூர் தர்காவிலே” என்று பொய்சொல்லி உண்டியல் வசூலில் வாழ்பவர்கள் அவர்கள்.அடுத்த தலைமுறையினை ஏமாற்ற தனி அடக்கஸ்தலம் அவர்களுக்கு தேவைப்படுகிறது. மற்றபடி இஸ்லாம் இது போன்ற பிரைவேட் கல் கட்டிட கபர்ஸ்தான்களை தரைமட்டமாக்கவே கட்டளை இடுகிறது.
ஒன்றுபட்ட பள்ளிவாசலில் தொழக்கூடாது என்று தடுத்து தாங்கள் கட்டிய தனிப் பள்ளிவாசலுக்கு கூட்டம் சேர்த்த சுயநல தவ்ஹீத் புரோகிதர்களின் இரட்டை வேடமே இக்கட்டுரை.
குறிப்பாக மூச்சிற்கு முன்னூறு தவ்ஹீது கோஷம் போடுபவர்கள்.சுய சிந்தனையை புரோகித முல்லாக்களிடம் மொத்தமாக குத்தகைக்கு கொடுத்துவிட்டனர ்.ஓரிறைவனை வணங்கச் சொல்வதுதான் இஸ்லாம். ஆனால் தவ்ஹீது என்ற தனிச் சொல் குர் ஆனிலும், நபி மொழிகளிலும் ஒன்று கூட இல்லை.இது மனோ இச்சையை பின் பற்றும புரோகித கூட்டம்.இதற்கும ் உண்மை இஸ்லாத்திற்கும் இம்மி அளவும் சம்பந்தமில்லை
இதை எதிர்ப்பவர்கள்த ான் மேலே சகோதரர் ஹளரத் அலியால் தூற்றப்பட்ட தவ்ஹீத்வாதிகள். நபிகள் நாயகம், என்னை எவ்வாறு தொழக்கன்டீர்களோ அவ்வாறே தொழுது கொள்ளுங்கள் என்று கட்டளையிட்டுள்ள ார் அவரது கட்டளையை நிறைவேற்ற முயன்றதால் பள்ளியை விட்டு விரட்டினார்கள் மேற்கண்ட ஹளரத் அலி பிரதர்ஸ் இன்று தவ்ஹீதுவாதிகள் தனிப்பள்ளி கன்டனர் என்று கோபிக்கிறார். ஏன் தனி கபர்ஸ்தான் கூடாது என்று வேறு கேட்கிறார். மன்னுக்குள் செத்துக்கிடக்கு ம் போதும் எங்க இம்மாம் சொன்னபடிதான் சாவோம் சுடுகாட்டுக்குக ப் போவோம் என்று அடம்பிடித்து மவுத்தானவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து தடுத்தால் தனி கபர்ஸ்தான் பற்றியும் யோசிக்கவேன்டி வரும்.
RSS feed for comments to this post