அகண்ட பாரதம் ஆரியநாடு!
நால்வர்ணம் நாட்டுநலன்!
பசுவதை தெய்வக்குற்றம்!
இந்தி பொதுமொழி!
சமஸ்கிருதம் தெய்வபாஷை!
மதமாற்றம் தடைசெய்!
RSS எனும் பச்சைப் பார்ப்பன இயக்கம் தோன்றும் முன்னரே இம் முழக்கங்களுக்கு சொந்தக்காரன்!. RSS இயக்கத்தின் முன்னோடி! தன் கவிதைகளில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் சிலதை கிறுக்கி தன்னை முற்போக்காளனாய் காட்டிக் கொள்ளும் வித்தையில், கை தேர்ந்தவன் ஆரிய சனாதன வெறிபிடித்த பாரதி!
அதனால்தான்
"வேதம் அறிந்தவன் பார்ப்பான்-பல
வித்தை தெரிந்தவன் பார்ப்பான்"
என்றான் போலும்!
அகண்ட பாரதம் ஆரியநாடு!
"உன்னத ஆரிய நாடெங்கள் நாடே"-என்றும்
"வானாறு பேரிமய வெற்பு முதல்
பெண்குமரி யீராகும் ஆரியநா டென்றே யறி!"-என்றும்
இந்திய நாட்டை முன்று சதவீத பார்ப்பனர்களின் நாடாகப் பாடி மகிழ்ந்தான்!.
“ஆரியர் வாழ்ந்து வரும் அற்புத நாடென்பது போய்ப்
பூரியர்கள் வாழும் புலைத்தேச மாயினதே"
“வீரியம் அழிந்து மேன்மையும் ஒழிந்து நம்
ஆரியர் புலையர்க் கடிமைகள் ஆயினர்".
- என்று புலம்பினான்!.
நால்வர்ணம் நாட்டுநலன்!
பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் முதலிய நால்வருணங்கள் இருக்க வேண்டும். நால்வருணம் அழிந்தால் மனித இனமே அழிந்து விடும் என்ற வர்ணாஸ்ரம வெறிபிடித்த பாரதி
"நாலு குலங்கள் அமைத்தான் - அதை
நாசம் உறப்புரிந்தனர் மூடமனிதன்"
- என்றான்.
"நான்கினில் ஒன்று குறைந்தால்
வேலை தவறிச் சிதைந்தே - செத்து
வீழ்ந்திடும் மானிடச் சாதி"
- என்று ஒப்பாரி வைத்தான்.
சர்.பிடி.தியாகராயர், டி.எம்.நாயர், சி.நடேசனார் ஆகியோர் தென்னிந்திய நலஉரிமை சங்கம் என்ற பெயரில் பார்ப்பனரல்லாதார் இயக்கத்தை தோற்றுவித்தபோது, அதற்கு எதிர்வினையாற்றியவன் பாரதி!
“பொய்யும் புனைவுமாகத் திராவிடர்களென்றும் ஆரியர்கள் என்றும் பழைய சொற்களுக்குப் புதிய அபாண்டமான அர்த்தங்கள் கற்பித்துக் கொண்டு வீண் சண்டைகள் வளர்ப்பதில் ஹிந்து சமூகத்துக்கே கெடுதி விளையக்கூடும். இந்தப் பிராமணரல்லாதார் கிளர்ச்சி கால கதியில் தானே மங்கி அழிந்து விடுமென்று நிச்சயிப்பதற்கும் போதிய காரணங்களிருக்கின்றன" என்றான்.
பசுவதை தெய்வக்குற்றம்!
"பசுவை இந்துக்களாகிய நாங்கள் தெய்வமாக வணங்குவதால், நாங்கள் பெரும்பகுதியாக வாழ்வதும், எங்களுடைய பூர்வீக சொத்தாகிய இந்தத் தேசத்தில் பஹிரங்கமாகப் பசுவின் கொலையை யாரும் செய்யாமல் இருப்பதே மரியாதையாகும்" என்று 1917லேயே சுதேசமித்திரன் ஏட்டில் பசுவதை தடை கோரியவன் பாரதி!
இந்தி பொதுமொழி!
இந்தியாவின் தேசியமொழியாக இந்தி இருக்கவேண்டும் என்று 1906ல் "இந்தியா" வார ஏட்டில் "இந்திபாஷை பக்கம்" என்ற தலைப்பில் கட்டுரை எழுதினான்.
“தமிழர்களாகிய நாம் ஹிந்தி பாஷையிலே பயிற்சி பெறுதல் மிகவும் அவசியமாகும். ஹிந்திப் பாஷையை எதிர்க்க என்ன அவசியம் இருக்கிறது என்று கேட்கிறோம். இந்தியா பலவித பிரிவுகளுடையதாய் இருந்த போதிலும் உண்மையிலே ஒன்றாய் இருப்பதற்கிணங்க, அதிலுள்ள வெவ்வேறு நாடுகளிலே வெவ்வேறு பாஷைகளிருந்த போதிலும் முழுமைக்கும் ஒரு பொது பாஷை வேண்டும். தமிழர்கள் தமிழும் ஹிந்தியும், தெலுங்கர் தெலுங்கும் ஹிந்தியும், பெங்காளத்தார் பெங்காளியும் இந்தியும் என இவ்வாறே எல்லா வகுப்பினரும் அறிந்திருப்பார்களானால் நமக்குப் பொதுப்பாஷை ஒன்றிருக்கும்". (பாரதி தரிசனம்)
சமஸ்கிருதம் தெய்வபாஷை!
செத்தமொழி சமஸ்கிருதத்தை தெய்வபாஷை என்று உயர்த்திப் பிடித்தவன் பாரதி!
“நம் முன்னோர்களைப் பின்பற்றி புண்ணிய பாஷையாகக் கொண்டாடி வரும் சமஸ்கிருத பாஷை மிகவும் அற்புதமானது. அதைத் தெய்வ பாஷையென்று சொல்வது விளையாட்டன்று. மற்ற சாதாரண பாஷைகளையெல்லாம் மனித பாஷையென்று சொல்லுவோமானால், இவை அனைத்திலும் சிறப்புடைய பாஷைக்குத் தனிப்பெயர் ஒன்று வேண்டுமல்லவா. அதன் பொருட்டே அதைத் தெய்வ பாஷை என்கிறோம்".(பாரதியார் கட்டுரைகள்)
"யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவ தெங்கும் காணோம்"
என்கிற பாடலைக்கூட பாரதி 1915 ஆம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற தமிழ்ச் சங்கத்தின் பரிசுப் போட்டிக்காக நண்பர்களின் வற்புறுத்தலினால் எழுதியதாக கூறப்படுகிறது. எனவே இப்பாடலும் பாரதிக்கு தமிழ்மேல் இருந்த காதலால் எழுதப்பட்டது அல்ல என்பது புலனாகிறது.
மதமாற்றம் கூடாது!
பஞ்சத்தில் பசியால் வாடிய மக்களுக்கு பல்வேறு உதவிகளைச் செய்துவந்த கிறித்துவப் பாதிரியார்கள் மீது சீறிப் பாய்ந்தான் பாரதி.
"எங்கிருந்தோ வந்த ஆங்கிலேயப் பாதிரிகள் பஞ்சம் பற்றிய ஜனங்களுக்குப் பலவித உதவிகள் செய்து நூற்றுக்கணக்கான மனிதர்களையும், முக்கியமாக திக்கற்ற குழந்தைகளையும், கிறிஸ்தவ மதத்திலே சேர்த்துக் கொள்கிறார்கள்.
ஹிந்து ஜனங்களின் தொகை வருஷந்தோறும் அதிபயங்கரமாகக் குறைந்து கொண்டு வருகிறது. ஹிந்து ஜனங்கள்! நமது ரத்தம், நமது சதை, நமது எலும்பு, நமது உயிர். கோமாமிசம் உண்ணாதபடி அவர்களைச் சுத்தப்படுத்தி, அவர்களை மீண்டும் நமது இந்து சமூகத்திலே சேர்க்க வேண்டும்." (பாரதியார் கட்டுரைகள்)
1921 இல் "லோக குரு பாரதமாதா" என்ற தலைப்பில் "இந்தியாவிற்குச் சுதந்திரம் கேட்பதே இந்து தர்மத்தைக் காப்பாற்றத்தான்" என்று எழுதியுள்ளான்.(பாரதியார் கட்டுரைகள்)
பாரதியும் மீசையும்!
பார்ப்பன தர்மத்திற்கு எதிராக மீசை வளர்த்தான் பாரதி என்று சிலாகிப்பர் சிலர். பாரதியின் மீசை பார்ப்பன தர்மத்திற்கு எதிரானதா? தான் மீசை வளர்த்த கதையை அவரே சொல்கிறார்:
“வேத பூமியாகிய ஆரிய வர்த்தத்தில் பிராமணர்களில் மீசை இல்லாமலிருப்பது சாஸ்திர விரோதமென்று பாவிக்கிறார்கள். அங்கு ஒருவன் மீசையைச் சிரைத்தால் அவனுடைய நெருங்கிய சுற்றத்தாரில் யாரேனும் இறந்து போனதற்கடையாளமாகக் கருதப்படுகிறது. பல வருஷங்களுக்கு முன்பு நான் ஸ்ரீகாசியில் ஜயநாராயண கலாசாலை என்ற இங்கிலீஷ் பள்ளிக்கூடத்தில் சேர்ந்து வாசிக்கப் போனேன். நான் தமிழ்நாட்டிலிருந்து சென்றவனாதலால் தமிழ்நாட்டுப் பிராமணரின் வழக்கப்படி அடிக்கடி முகச்சவரம் செய்து கொண்டிருந்தேன். அப்போது என்னுடன் படித்துக் கொண்டிருந்த பிள்ளைகள் என்னை நோக்கி மிகவும் ஆச்சர்யப்பட்டனர்.
எப்போது பார்த்தாலும் இவன் மீசையை சிரைத்து விட்டு வருவதன் காரணம் யாதென்று அவர்களுக்குள்ளேயே பலநாள் ஆலோசனை செய்து பார்த்தார்கள். அவர்களுக்கொன்றும் புலப்படவில்லை. கடைசியாக என்னையே ஒருவன் கேட்டுத்தீர்த்தான். ‘உங்கள் குடும்பத்தில் யாரேனும் வாரம் தவறாமல் செத்துப் போய்க் கொண்டிருக்கிறீர்களா? என்று என்னிடம் வினவினான். அவன் இங்ஙனம் கேட்டதன் காரணத்தை அறிந்து கொண்டு, “அப்படியில்லையப்பா! தமிழ்நாட்டில் பிராமணர் மீசை வைத்துக் கொள்ளும் வழக்கமில்லை என்று தெரிவித்தேன்." என்கிறார். (பாரதியார் கட்டுரைகள்).
எனவே வடநாட்டு ஆரியர்களின் கலாச்சார முறையைப் பின்பற்றியே பாரதி மீசையை வைத்துக் கொண்டார் என்பது தெரிகிறது.
ஆங்கிலேயரிடம் மன்னிப்பு கோருவதும், வெள்ளையன் கையில் அகப்படாமல் ஓடிஒளிந்து, தலைமறைவு வாழ்கை வாழ்வதுமாக இருந்த பாரதியின் மீசையை வீரத்தின் அடையாளமாக பலர் புகழ்வதைக் கண்டு எப்படி சிரிப்பது எனத் தெரியவில்லை!
"அச்சமில்லை அச்சமில்லை" என்று அவன் பாடியதை நினைக்கையில், கோழைகள் இருள் சூழ்ந்த பகுதிகளைக் கடக்கும்போது பயம் தொற்றிக்கொள்ளாமல் இருக்க உரத்த குரலில் பாடிக்கொண்டோ, பேசிக்கொண்டோ நடக்கும் பழக்கம் இன்றும் கிராமப்பகுதிகளில் உண்டு. அதுதான் நினைவிற்கு வருகிறது. பாரதியின் "அச்சமில்லை அச்சமில்லை" பாடலும் அந்தவகையில் எழுந்தது தானோ?
பாரதி ஆராய்ச்சி!
திராவிட இயக்கத் தோழர்களே கூட பாரதியின் ஒருசில பாடல் வரிகளை பார்த்துவிட்டு தவறான மதிப்பீட்டுக்கு வந்துவிடுகிறார்கள். 1937லேயே "பாரதி ஆராய்ச்சி" என்ற தலைப்பில் குடியரசு ஏட்டில் வெளிவந்த கட்டுரை இதற்கு தக்க பதிலாக அமையும்!.
"பாரதியை ஒரு தெய்வமாக பாவித்து, அவருடைய படத்துக்கு மாலைபோட்டு, தீப நெய்வேத்தியங்கூட சிலர் செய்கிறார்கள். இப்படியெல்லாம் செய்வதற்குக் காரணம் பார்ப்பனர்களின் சூழ்ச்சிப் பிரச்சாரமும், பொதுமக்களின் குருட்டுத்தனமான முட்டாள் நம்பிகையுமே ஆகும்.
இந்தக் கொண்டாட்டங்களுக்கு முக்கிய காரணம் அவர் ஒரு பார்ப்பனர் என்பதேயாகும். ஒரு பார்ப்பான் எவ்வளவு அயோக்கியனாயிருந்தாலும் , ஒழுக்கங் கெட்டவனாயிருந்தாலும், துர்பழக்கமுடையவனாயிருந்தாலும், பேடியாயிருந்தாலும், பித்துக்குளியாய் இருந்தாலும் அவனைப் பற்றி அவனுடைய குற்றங்களையெல்லாம் மறைத்து "இந்திரன்" என்றும் "சந்திரன்" என்றும் உயர்த்திப் பேசி, எழுதி அதன் மூலம் தங்கள் இனப்பிழைப்புக்கு வழிதேடிக் கொள்கிறார்கள். இந்த அடாத காரியத்துக்கு தகுந்த வசதிகள் அவர்களுக்குத் தாராளமாய் இருக்கின்றன.
மனு ஆட்சி எப்படியாவது ஏற்படவேண்டும் என்று பார்ப்பனர்கள் இரவும் பகலும் கனவு கொண்டிருக்கும் பொழுது, அதற்கு உதவியாக எழுதப்பட்டிருக்கும் பாடல்களை பார்ப்பனர்கள் கை நழுவ விடுவார்களா? பாரதி அநேக பாடல்களை குடிவெறியில் பாடியிருக்கிறார். அவர் நிதான புத்தியோடு பாடவில்லை என்று சுலபத்தில் அறிந்து கொள்ளலாம்.
பார்ப்பனரைப் பற்றி பாரதியின் உண்மையான அபிப்பிராயம் என்னவென்றால் பார்ப்பனரே உயர்ந்த வகுப்பினரென்றும், இந்தியா அவர்களுக்கு சொந்த சொத்து என்றும், அவர்களுடைய ஆரிய பாஷையே உயர்ந்ததென்றும் கருதியே வந்திருக்கிறார் என்பதுதான்!. பார்ப்பனரின் நிலைமை உயர வேண்டுமென்பதே அவருடைய நோக்கமென்றும் தெரிகிறது. இதற்கு மாறாக அவரைப் பற்றி நினைத்துகொள்ள "பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே", "தமிழ்மொழி போல் எங்கும் காணோம்" என்ற வரிகள் எடுத்துக்காட்டப் படுமானால் அப்படி இரண்டொன்று பாடியிருப்பதும் கூடக் குடிவெறி என்று தான் சொல்லவேண்டும்" (குடியரசு 17.10.1937)
- கி.தளபதிராஜ்
இன்று சமூக நீதி குறித்து பேசும் அனைவருக்கும் இ.வெ.ரா., சீவானந்தம், அம்பேத்க்கார் போன்ற முன்னோடிகளின் அடித்தளம் உள்ளது. ஆனால் பாரதி வாழ்ந்த காலத்தில் மாற்றுச் சமூகச் சிந்தனைக குறித்து எடுத்துக் கூறவோ அல்லது அதுகுறித்து விவாதிக்கவோ வழிகளே இல்லை. அந்த சூழ்நிலைகளிலும் சமூகத்தில் இருந்து மாறுபட்ட ஒரு சிந்தனைவாதியாக தன்னை தானே மாற்றம் செய்தவர் பாரதி. ஒருவர் தனது சுய சமூக அடையாளங்களை விடுத்து சமூகப் போராளியாய் மாற சில காலம் தேவை. அது பாரதிக்கும் தேவைப்பட்டது. இதை தவறு என்று யாராவது கருதினால், அவர்கள் தங்கள் சிந்தனை ஓட்டத்தை சுய பரிசோதனை செய்வது நல்லது.
இன்று உலகின் மிகப்பெரிய ஜனநாயகமான இந்தியாவில் கருத்துச் சுதந்திரத்தின் நிலை என்ன என்பது அனைவரும் அறிந்தது. 100 வருடங்களுக்கு முன்னர் அடிமை தேசத்தில் ஒரு எதிர் கருத்தை பதிவு செய்துவிட்டு எவ்வாறு வாழ்ந்துவிட முடியும் ... ? ஓடி ஒளிந்து தான் செயல்பட முடியும். அதையே பாரதியும் செய்தார். ஏன்னெனில் அரசிடம் சிக்கினால் இருக்கும் ஓரிரு சமூக போராளிகளையும் சமாதிக்கு அனுப்பி விடுவார்கள் என்பதே உண்மை. கம்முனிசம் தடை செய்யபட்டிருந்த அன்றைய சூழலில் அதன் தலைவர்கள் ஒளிந்து மறைந்தே செயல்பட்டனர், அதற்காக அவர்கள் எல்லாம் கோழைகள் என்ற அர்த்தம்...?
1921 ஆம் ஆண்டு பாரதி மரணிக்கிறார் (38 வயது), அந்த காலகட்டம் தான் மோகந்தாஸ் காந்தி, இ.வெ .ரா., ஜீவானந்தம் போன்றோர் தங்கள் பொது அரசியல் வாழ்வை இந்தியாவில் துவங்கும் காலக்கோடு. அப்படியானால் பாரதி வாழ்ந்த காலத்தில் அவர் செய்த பணிகள் பின்னர் வந்தவர்களுக்கு பெரியதொரு அடித்தளமாக அமைந்தது என்பது தான் சரித்திர உண்மை.
மேலும் பாரதியின் படைப்புகளை தடைசெய்யக் கோரியவர்கள் (இந்திய சுதந்திரத்திற்க ு பின்னர்) எல்லாம் பார்ப்பான இந்துக்கள். அதை எதிர்த்து பாரதியின் படைப்புகளை நாட்டுடைமைபடுத் த போராடி வென்றவர்கள் இ.வெ.ரா., சீவானந்தம், பாரதிதாசன் போன்றோர். பாரதிதாசனின் 'மகாகவி' மற்றும் 'புது நெறி கண்ட புலவன்' போன்ற படைப்புகள், இந்த உண்மையை விளக்கும்.
ஒரு போராளியை வெறும் அவரது சமூக வகுப்பை மட்டும் கணக்கில் கொண்டு கட்டுரை எழுதுபவர்கள், பூனை கண்ணை மூடிக்கொண்டு உலகம் இருளில் உள்ளது என எண்ணுவதற்கு ஒப்பாகும்.
வாதீடு: 094
"உலகின் ஆதிமொலி ஆவது யாதோ?"
பொருல்:
உலகின் ஆதி காலத்தில் தோன்ரிய மொலியில், ஒரே ஒரு "க-ச-ட-த-ப, ன-ர-ல" எலுத்து வகய்யே இருந்திருக்க வேன்டும். அப்படிப்பட்ட தொன்மய்யான மொலியாக, தென்புலத்தின் தமிலு மொலி வெலங்கலாகுது என்ப.
இப்பொலுதய்ய கனினி உலகத்துக்கும், தமிலு போன்ர எலுத்து என்னிக்கய்க் குரய்வாகக் கொன்ட (19 எலுத்து) விசய்ப்பலகய்யே, விரய்வான செயல்பாட்டுக்கு த் தேவய்யாக உல்லது என்ப. சிரப்பு எலுத்துக் குரியீட்டய், அரிவியல் பயன்பாட்டுக்கு மட்டுமே பயன்படுத்துதல் வேன்டும்.
--------------- --------------- --------------- -------
வாதீடு: 095
"உலகின் ஆட்சிமொலி ஆவது யாதோ?"
பொருல்:
உலகின் ஆட்சி மொலி ஆவதில்,
1) அடிப்படய்யான எலுத்து விடுபடாமல் இருத்தல் வேன்டும்
(எடுத்துக்காட்ட ு: எ/ஏ, ஒ/ஓ),
2) எலுத்தின் என்னிக்கய் குரய்வாக இருத்தல் வேன்டும்
(எடுத்துக்காட்ட ு: N = ன/ண, R = ர/ற, L = ல/ள/ழ),
3) எலுத்தின் ஒரு வரி வடிவுக்கு ஒரு ஒலி வடிவம் மட்டும் இருத்தல் வேன்டும்
(எடுத்துக்காட்ட ு: I = அ, E = இ, U = உ, A = எ, O = ஒ),
4) ஒரு சொல்லுக்கு ஒரு பொருல் மட்டும் இருத்தல் வேன்டும்,
5) கர்ப்பதுக்கு மிகச் சுலபமானதாக இருத்தல் வேன்டும்.
--------------- --------------- --------------- -------
வாதீடு: 096
"மொலியின் தனித்தன்மய் இன்பமா, துன்பமா?"
பொருல்:
1) "ஒரு மொலியில்
னானான்கு_க,
னானான்கு_ச,
னானான்கு_ட,
னானான்கு_த,
னானான்கு_ப,
உன்டு என்ப."
2) "ஒரு மொலியில்
F, Z,
உன்டு என்ப."
3) "ஒரு மொலியில்
ற, ழ,
உன்டு என்ப."
அவ்வாரு ஒவ்வொரு மொலியும் தன்னிடத்தில் சிரப்பு எலுத்தய்க் கொன்டு தனித் தன்மய்யுடன் வெலங்கினால், உலக மொலியாக, ஆட்சி மொலியாக, இனய்ப்பு மொலியாக எந்த மொலியய் ஏர்க்க இயலும்?
உலக மொலி அனய்த்திலும் உல்ல பொதுவான எலுத்தய் மட்டும், எந்த மொலி கொன்டுல்லதோ, அந்த மொலியே உலக மொலியாக, ஆட்சி மொலியாக, இனய்ப்பு மொலியாக ஆதலும் கூடும் என்பதில் அய்யம் ஏதும் உன்டோ? அப்படிப்பட்ட மொலியாக, தனித்தன்மய் னீக்கப்பட்ட மொலியாக, சிரப்பு எலுத்து னீக்கப்பட்ட மொலியாக தமிலு மொலி உல்லது.
சிரப்பு எலுத்துக் குரியீட்டய், அரிவியல் பயன்பாட்டுக்கு மட்டுமே பயன்படுத்துதல் வேன்டும்.
--------------- --------------- --------------- -------
வாதீடு: 097
"எலுத்துப் பிலய், மொலியின் குட்ரமே"
"I (=அ), E (=இ), U (=உ), A (=எ), O (=ஒ)" என்பதே, சரியான ஒலிப்பு முரய் ஆகலாம். எந்த ஒரு மொலியின் வரி வடிவுக்கும், ஒலி வடிவுக்கும் இடய்யே குலப்பமும் வேருபாடும் இருந்திட்டால், அதிகம் படித்த மேதய்யரின் எலுத்திலேயும் கூட பிலய் ஏர்ப்படலாகும். எலுத்துப் பிலய் என்பது, மொலியின் குட்ரமே ஆகும்.
அ = I = Ice,
ஆ = II,
இ = E = English,
ஈ = EE,
உ = U = Union,
ஊ = UU,
எ = A = Age,
ஏ = AA,
ஒ = O = One,
ஓ = OO,
--------------- -----
க = K,
ங = G (NG),
ச = S,
ஞ = J (NJ),
ட = T,
ன = N,
த = D,
ந = H (NTH),
ப = P,
ம = M,
ய = Y,
ர = R,
ல = L,
வ = V,
--------------- -----
தமிலு மொலியில் ஆக மொத்த எலுத்து = 24.
இதில், உயிர் எலுத்தின் இரட்டிப்பு னெடில் எலுத்து ஆதலாலும், மெய்யெலுத்துடன் உயிரெலுத்தின் சேர்க்கய் உயிர்மெய்யெலுத் து ஆதலாலும், கனினித் தமிலு மொலியின் விசய்ப்பலகய் எலுத்து = 19 ஆகும்.
--------------- --------------- --------------- -------
வாதீடு: 098
"எ-ஏ, ஒ-ஓ ஒலினுட்பம் தேவய்யே?"
பொருல்:
உலக மொலி, ஆட்சி மொலி, இனய்ப்பு மொலி எது ஆனாலும், அனய்த்துக்கும் எ-ஏ, ஒ-ஓ குரில்-னெடில் ஒலி னுட்பம் மிகத் தேவய்யானது ஆகும். இந்த ஒலி னுட்பம் ஆனது, பேச்சு உனர்தலில் (Speech Recognition) மிக முக்கியமானது ஆகும்.
உலக மொலி, ஆட்சி மொலி, இனய்ப்பு மொலி என்ரு போட்ரப்படும் மொலியில், அ_ஆ, இ_ஈ, உ_ஊ என்னும் எலுத்து வேருபாடு இருப்பது உன்டு. அது போன்ரு எ_ஏ, ஒ_ஓ என்னும் எலுத்து வேருபாடும் இருத்தல் வேன்டாமா? எ_ஏ, ஒ_ஓ எலுத்து வேருபாடு இருந்தால்தானே "எடு_ஏடு, கெடு_கேடு, ஒடு_ஓடு, கொடு_கோடு, தொடு_தோடு, எட்டு_ஏட்டு, கெட்டு_கேட்டு, தெக்கு_தேக்கு, ஒட்டு_ஓட்டு, கொட்டு_கோட்டு, தொட்டு_தோட்டு" ஆகிய சொல்லின் பொருல் வேருபாட்டய் உனர்த்துதல் இயலும்.
உலக மொலி, ஆட்சி மொலி, இனய்ப்பு மொலி எது ஆனாலும், அதிலே எ-ஏ, ஒ-ஓ குரில்-னெடில் ஒலி னுட்பம் இல்லாவிட்டால், எடு = ஏடு ஆகி, ஒடு = ஓடு ஆகி, கொடு = கோடு ஆகி, தொடு = தோடு ஆகி, எட்டு = ஏட்டு ஆகி, கெட்டு = கேட்டு ஆகி, தெக்கு = தேக்கு ஆகி, ஒட்டு = ஓட்டு ஆகி, கொட்டு = கோட்டு ஆகி, தொட்டு = தோட்டு ஆகி மொலியிலே பெருங் குலப்பம் ஏர்ப்படலாகுமே.
--------------- --------------- --------------- -------
வாதீடு: 099
"ன_ண, ர_ற, ல_ள_ழ தேவய்யோ?"
பொருல்:
எது சுலபமான மொலி ஆதல் கூடுமோ, அதுவே உலகின் பொதுவான மொலி ஆதல் கூடும் என்பதில் அய்யம் ஏதும் உன்டோ?
"WONDER" என்ர சொல்லய் = "WOன்DER, WOண்DER" என்ரும்,
"WORLD" என்ர சொல்லய் = "WOர்LD, WOற்LD" என்ரும்,
"WORLD" என்ர சொல்லய் = "WORல்D, WORள்D, WORழ்D" என்ரும்,
ஒலி னுட்ப வேருபாட்டுடன் எலுதிட்டாலும், பொருல் வேருபாடு உன்டாவது இல்லய். அதனால்
"N" என்ர எலுத்துக்கு, = "ன், ண்" என்ரும்,
"R" என்ர எலுத்துக்கு, = "ர், ற்" என்ரும்,
"L" என்ர எலுத்துக்கு, = "ல், ள், ழ்" என்ரும்,
வரி வடிவ வேருபாடு தேவய் இல்லய். அது போன்ரு
"கப்பல்" என்ர சொல்லய் = "Kaப்பல், Gaப்பல், Haப்பல்" என்ரும்,
"சங்கு" என்ர சொல்லய் = "CHaங்கு, Jaங்கு, Saங்கு" என்ரும்,
"கடல்" என்ர சொல்லய் = "கTaல், கDaல்" என்ரும்,
"தலய்" என்ர சொல்லய் = "THaலய், DHaலய்" என்ரும்,
"படம்" என்ர சொல்லய் = "Paடம், Baடம், Faடம்" என்ரும்,
ஒலி னுட்ப வேருபாட்டுடன் எலுதிட்டாலும், பொருல் வேருபாடு உன்டாவது இல்லய். அதனால்
"க" என்ர எலுத்துக்கு = "Ka, Ga, Ha" என்ரும்,
"ச" என்ர எலுத்துக்கு = "CHa, Ja, Sa" என்ரும்,
"ட" என்ர எலுத்துக்கு = "Ta, Da" என்ரும்,
"த" என்ர எலுத்துக்கு = "THa, DHa" என்ரும்,
"ப" என்ர எலுத்துக்கு = "Pa, Ba, Fa" என்ரும்,
வரி வடிவ வேருபாடு தேவய் இல்லய்.
--------------- --------------- --------------- -------
வாதீடு: 100
"மொலியின் வலர்ச்சிக்கு எல்லய் உன்டோ?"
பொருல்:
சுலபமான, விரய்வான கருத்துப் பரிமாட்ரத்துக்க ு ஏட்ரவாரு, சிந்தனய்க் கருவி ஆகிய மொலியய்க் காலம்தோரும் மேம்படுத்தி வருதல் வேன்டும். பனய் ஓலய்யிலும், பொன் ஏட்டிலும் எலுதப்பட்டக் காலம் கடந்து, இன்ரு கனினிக் காலம் தோன்ரி உல்லது. கனினியின் செயல் திரனய் விரய்வுபடுத்தும ் வகய்யில், எலுத்தின் வரிவடிவ என்னிக்கய் மிகாதவாரு, மொலியய்ப் பேனுதல் வேன்டும்.
தமிலு மொலியில் உயிர் எலுத்தின் இரட்டிப்பு னெடில் எலுத்து ஆதலாலும், மெய்யெலுத்துடன் உயிரெலுத்தின் சேர்க்கய் உயிர்மெய்யெலுத் து ஆதலாலும், கனினித் தமிலு மொலியின் விசய்ப்பலகய் எலுத்து = 19 ஆகும். அவய் வருமாரு:
உயிர்க் குரில் எலுத்து = 5,
மெய் வல்லின எலுத்து = 5,
மெய் மெல்லின எலுத்து = 5,
மெய் இடய்யின எலுத்து = 4.
--------------- --------------- --------------- -------
RSS feed for comments to this post