அநீதியை ஒருவர் கண்டிப்பதாக இருந்தால், அவ்வாறு கண்டிப்பவர் பிறருக்கு அநீதி இழைப்பதில் இருந்து தனது கரத்தை பாது காத்துக் கொண்டவராக இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ண முமாக அநீதியில் திளைப்பவர் மனிதநேயம் பேசினால் மக்கள் நகைப்பார்கள்.

இதுபோல் உலக அளவில் அநீதியின் மறுபெயர் அமெரிக்கா என்று சொல்லும் அளவுக்கு அன்னிய நாடுகளில் புகுந்து போர்க் குற்றம் புரிந்த, இப்போ தும் போர்க் குற்றத்தை சளைக் காமல் செய்து வரும் அமரிக்கா, இலங்கையின் மீது போர்க் குற்றம் தொடர்பான வரைவுத் தீர் மானத்தை ஜெனீவாவில் நடந்து வரும் ஐ.நா. மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தில் கொண்டு வந்துள்ளது.

திருத்தங்களைச் செய்வதற்கு வசதியாக, உறுப்பு நாடுகளுக்கு தீர்மான நகல்கள் வழங்கப்பட் டிருக்கின்றன.

அமெரிக்காவின் இலங்கைக்கு எதிரான இந்த தீர்மானம் நிறைவேற உறுப்பு நாடுகளின் சரிபாதிக்கும் மேற்பட்ட நாடுக ளின் ஆதரவு தேவை என்று கூறப்படுகிறது.

இது ஒருபுறமிருக்க, இலங்கை யில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடந்த போரில் பல்லாயி ரம் அப்பாவி மக்கள் கொல்லப் பட்டார்கள்; இன்றும் பல்வேறு பாதிப்புகளில் அந்த மக்கள் உழன்று வருகிறார்கள்.

இலங்கை அரசு விடுதலைப் புலிகளை அழிக்கிறேன் என்ற பெயரில் அப்பாவி தமிழர்களின் உயிரை சூறையாடியது. எனவே இலங்கை அரசு அதற்கான தண் டனையை அடைந்தே தீர வேண்டும் என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்தில்லை. அதே நேரத்தில் இலங்கையில் நடந் தது உள்நாட்டுப் போர். அதாவது தனி அதிகாரம் என்ற பெயரில் ஆயுதம் தூக்கி அரசுக்கு எதிராக போராடக் கிளம்பிய ஒரு குழு விற்கு எதிரான போர்.

ஆயுததாரிகளை ஒழிக்கும் இந்த போரில் அப்பாவி மக்கள் பாதிக்கப்பட்டதால் இலங்கை போர்க் குற்றம் புரிந்தது என்ற அமெரிக்காவின் பேச்சு நியாயம் என்றே வைத்துக் கொண்டா லும், இதேபோன்று இந்தியாவில் காஷ்மீர் பகுதியில் விடுதலை கேட்டுப் போராடுபவர்களை கொல்கிறேன் என்ற பெயரில் அப்பாவி மக்களை இந்திய ராணு வம் கொன்று குவிக்கிறதே! இது அமெரிக்காவின் பார்வையில் போர்க் குற்றமாக தெரியவில் லையா?

இன்னும் சொல்லப்போனால் அவவாறு காஷ்மீரில் விடுதலை கேட்டு போராடுபவர்களை இந் தியாவின் வழிமுறையைப் பின் பற்றி அமெரிக்காவும் "தீவிரவாதி கள்' என்று சொல்கிறதே!

குஜராத் - மும்பை என நாட் டின் பல்வேறு பகுதிகளில் அப் பாவி மக்கள் கொல்லப்பட்டார் களே! இதெல்லாம் ஒரு குற்ற மாக அமெரிக்காவிற்கு தெரிய வில்லையா? இதெல்லாம் போர் சம்மந்தப்பட்டது அல்ல; பாது காப்பு மற்றும் மத ரீதியானது என்று அமெரிக்கா கூறுமானால், போர் என்று அறிவித்து அப்பா விகளை கொன்றால்தான் குற் றம். சாதரணமாக ஒரு சாராரை சாரை சாரையாக கொன்றால் அது உள்நாட்டு விவகாரமா?

போனால் போகிறது என்று இதையாவது விட்டு விடலாம். காஸா மீது ஆக்கிரமிப்பு நாடான இஸ்ரேல் நாள்தோறும் நிகழ்த்தி வரும் போர்க் குற்றம் அமெரிக்கா வின் கண்களுக்கு தெரியாதது ஏன்? தெரியவில்லை என்பதை விட போர்க் குற்றம் புரியும் இஸ் ரேலுக்கு பக்கபலமாக நிற்கும் அமெரிக்கா போர்க் குற்றம் பற்றி பேச தகுதியுண்டா?

இதையும் தாண்டி, இலங்கை உள்நாட்டுப் போர் பற்றி பேசும் அமெரிக்கா, அடுத்த நாடுகளில் புகுந்து செய்த அநீதிகள் கொஞ்ச நஞ்சமா? ஈராக்கின் மீது இரண்டு முறைபோர் தொடுத்து அப்பாவிகளை கொன்ற, ஆப்கானில் போர் தொடுத்து அப்பாவிகளை கொன்ற, லிபியா மீது போர் தொடுத்து அப்பாவிகளை கொன்ற, பாகிஸ்தான் மீது அறிவிக்கப் படாத போர் தொடுத்து, ஆளில்லா விமானம் மூலம் அப்பா விகளை கொன்றதே அமெரிக்கா, இவை கள் போர்க் குற்றங்கள் இல் லையா?

இப்போது ஈரானை தாக்கி போர்க் குற்றம் புரிய தக்க நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறதே! இது போர்க் குற்றம் இல்லையா?

ஜப்பானில் நாகாசாகியும்- ஹிரோஷிமாவும் அமெரிக்கா போர்க் குற்றங்களின் கேந்திரம் என்று இன்றும் சாட்சியம் சொல் லிக் கொண்டிருக்கிறதே! இப்ப டிப்பட்ட அமெரிக்கா போர்க்குற் றம் பற்றி பேசுவதா?

எனவே, ஐநாவில் அமெரிக்கா செய்யவேண்டியது முதலில் தன் மீதே போர்க்குற்றம் பற்றிய தீர்மானத்தைக் கொண்டு வந்து, அதற்குரிய தண்ட னையை அனுபவித்து விட்டு, பின்னர் அடுத்த நாட்டு போர்குற்றம் பற்றி பேசட்டும்; தீர்மா னங்கள் கொண்டு வரட்டும். அப்போது அமெரிக்கத் தீர்மா னங்களுக்க சர்வதேச அளவில் எதிர்ப்பு இருக்காது!

- முகவையார்

Pin It