அமெரிக்க ராணு வீரரான டெர்ரி ப்ரூக்ஸ் கியூபா நாட்டிற்கு அருகில் கடற்கரைப் பகுதியில் அமைந் துள்ள குவாண்டனமோ சிறையின் காவல் பணிக்கு கடந்த 2003ல் அனுப்பப் படுகிறார். குவாண்டனமோ சிறை பிரபலமடையாத நேரம் அது.

அங்கே அல்காயிதா மற்றும் தாலிபான் போராளிகள் அடைக் கப்பட்டிருந்தனர். அப்போது டெர்ரி ப்ரூக்ஸ் அந்தப் போராளி களின் மார்க்கமான இஸ்லாத் தைத் தழுவுவார் என்று நினைத் துக் கூடப் பார்க்கவில்லை.

பிற்காலத்தில் மொராக்கோ நாட்டைச் சேர்ந்த சிறைவாசிகளுடனான பழக்கம் அவரை அந்த வருடமே இஸ்லாத்தை தழுவ வைத்தது.

டெர்ரி ப்ரூக்ஸ் இஸ்லாத்தைத் தழுவிய செய்தி பழசுதான். ஆனால் சமீபத்தில் உலக மீடி யாக்களில் டெர்ரி மீண்டும் தலை காட்டினார். இதற்கு காரணம் அவர் இஸ்லாத்தைத் தழுவிய பின் முதன்முறையாக உம்ரா கிரியையை நிறைவேற்ற சென்றது தான்.

கடந்த வாரம் மெக்காவிற்கு சென்று உம்ரா கிரியையை நிறைவேற்றுவதற்கு முன் புனித நகரமான மதீனாவிற்குச் சென்றுள்ளார் டெர்ரி. அங்கே பத்திரி கையாளர்கள் சிலர் அடையாளம் கண்டு டெர்ரியை சூழ்ந்து கொள்ள "எனது கடந்த காலங்களின் கனவு உம்ரா செய்ய வேண்டும் என்பது'' எனத் தெரிவித் திருக்கிறார்.

குவாண்டனமோவிலிருந்த மொராக்கோ சிறைவாசியான அஹ்மத் அல் ரஷாதிதான், இவர் இஸ்லாத்தைத் தழுவ காரணமாக இருந்திருக்கிறார். டெர்ரி இஸ்லா மியனாக மாறிவிட்ட தகவல் அமெரிக்க இராணுவத் தலை மைக்கு தெரிந்தவுடன் இராணுவத்தை விட்டு வெளியேற்றப்பட்டிருக்கிறார் டெர்ரி.

"அல் ரஷாதியுடன் பலமுறை விவாதங்கள், வாதப் பிரதி வாதங்களைச் செய்து இறுதியில் 2003 டிசம்பர் மாதம் ஒருநாள் அதி காலை சரியாக 12:49 இஸ்லாத்தைத் தழுவும் அந்த சிறப்புமிகு முடிவை எடுத்ததை இன்று நினைத்துப் பார்க்கிறேன்.

என் வாழ்வில் மறக்க முடியாத தருணங்கள் அவை. நான் இஸ் லாத்தைத் தழுவிய அந்த நேரத் தில் சிறைவாசிகள் பலர் என் னைச் சுற்றி அமர்ந்திருந்தனர். அவர்களது புதிய தோழனாக முஸ்தாஃபா என்று நான் அழைக் கப்பட்டேன். பின் முஸ்தாஃ பாவோடு அப்துல்லாஹ் என்ற பெயரையும் இணைத்து தற் போது முஸ்ஃபா அப்துல்லாஹ் என்று அழைக்கப்படுகிறேன்...'' என்று கூறும் ப்ரூக்ஸ், ""அமெ ரிக்க ராணுவம் என்னை குவாண் டனமோ சிறைக்கு அனுப்ப முடிவு செய்தபோது, அதுவரை சிறைச் சாலையை கண்டிராத எனக்கு அது புது அனுபவமாக - சவாலான பணியாக இருக்கும் என மகிழ்ந்தேன்.

ஆனால் குவாண்டனமோ சிறைக்கு வந்ததும் எனக்கு அதிர்ச் சியாக இருந்தது. அந்த சிறை வளாகத்திற்குள் நுழைந்தபோதே அது கொடூரம் நிறைந்ததாக காட்சியளித்தது. சிறைக் கம்பிக ளுக்கு பின்னால் இருப்பவர்கள் உண்மையிலேயே ஆபத்தானவர் கள்; அதனால்தான் அதி உயர் பாதுகாப்பு வளையத்திற்குள் அடைக்கப்பட்டிருக்கிறார்கள் என்று எனக்குள் சொல்லிக் கொண்டேன்.

இரவு நேரங்களில் கைதிகள் அடைக்கப்பட்டிருக்கும் செல்க ளுக்கு வெளியில் அமர்ந்து அவர் களை கவனிப்பேன், இந்தருணங் களில் எங்களுக்கு இடையில் பரஸ்பர மரியாதை ஏற்பட்டது.

நான் குவாண்டனமோ சிறைக்கு செல்வதற்கு முன்பு வரை நாத்திகனாகவே இருந் தேன். இஸ்லாத்தைத் தழுவிய பின் இம்மார்க்கம் இனிமை யானது என்பதை உணருகிறேன். இஸ்லாம் ஒரு தூய்மையான மார்க்கம். அதுவே முற்றிலும் நேரான வழி என்பதை உணர்ந் தேன்.

நான் இஸ்லாத்தை தழுவும் எண்ணத்தில் இருப்பதை என் னோடு பணியாற்றிய மற்ற ராணுவ வீரர்களிடம் முதலில் மறைத்தேன். ஆயினும் எங்கள் அதிகாரிக்கு இந்த விஷயம் தெரிய வந்தபோது, அந்த அதி காரியும் மற்ற பாதுகாப்பு காவ லர்களும் என்னை கொடூரமாக நடத்தத் துவங்கினர். அமெரிக்காவை நான் காட்டிக் கொடுப் பதாக குற்றஞ்சுமத்தினார்கள். எனது பணிக்கால ஒப்பந்தம் முடிவதற்கு இரண்டு வருடங்கள் முன்பே ராணுவத்திலிருந்து நான் வெளியேற்றப்பட்டேன்...'' என நெகிழ்ச்சியுடன் தனது அனுப வத்தைப் பகிர்ந்து கொள்கிறார் டெர்ரி ப்ரூக்ஸ்.

இஸ்லாத்தை தழுவிய தனது அனுபவங்களைக் குறித்து நூல் ஒன்றை எழுதிக் கொண்டிருக்கிறார் டெர்ரி. பணியிலிருந்து விலக்கப்பட்டாலும் குவண்டனமோ சிறைவாசிகளுக்காக தன்னால் இயன்ற உதவிகளை செய்து வரும் இவர் "குவாண்டனமோ சிறையில் உண்மையில் மனிதத் தன்மையற்ற செயல்கள் அரங்கேறுகின்றன. குறைந்தபட்ச மனித உரிமைகளும் மீறப்படுகின்றன'' எனக் கூறுகிறார். இவர் எழுதும் நூலில் வெளி உலகிற்கு தெரியாத குவாண்ட னமோ கொடூரங்கள் இன்னும் வெளிப்படும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

- ஹிதாயா

நன்றி : இரான் புக் நியூஸ் ஏஜென்ஸி

Pin It