1917-ஆம் ஆண்டு கொல்கத்தாவில் காங்கிரஸ் மாகாண மாநாடு என்ற பெயரில், பிரபல ஆங்கில தினசரி ஒன்றில் விளம்பரம் வந்தது. அதில் மதராஸ் மாகாணத்தில் இருந்து கலந்துகொள்ள வந்த பார்ப்பனப் பிரதிநிதிகள் கண்களில் கலக்கம் காணப்பட்டது.

கொல்கத்தாவில் உள்ள தமிழ்ப் பார்ப்பனர் நடத்தும் “தஞ்சாவூர் மீல்ஸ் ஹவுஸ்” என்ற உணவு விடுதியில், தமிழகத்தில் இருந்து வந்த பார்ப்பனப் பிரதிநிதிகள் சி.எஸ். நரசிம்மாச்சாரி தலைமையில் தமிழகத்தில் பார்ப்பனர்களின் ஆதிக்கம் வலுவிழந்து வருவதையும், தெற்கே பார்ப்பனர் அல்லாத மாற்றுச் சக்தி பலம் வாய்ந்ததாக மாறிக் கொண்டு வருவது பற்றியும் கவலையுடன் விவாதித்தனர், இந்தியாவில் முதல்முறையாக பார்ப்பனர் - பார்ப்பனர் அல்லாதார் என்ற இரண்டு பிரிவுகளிலும் அரசியல் உருவாகிக் கொண்டு இருந்தது. கொல்கத்தா காங்கிரஸ் மாநாட்டில் இதன் தாக்கம் வெளிப்படத் தொடங்கியது.

congress-leaders1892 முதல் 1909 வரை :

1892 முதல் 1909 வரை காங்கிரசில் பார்ப்பனர்கள் ஆதிக்கமே 50 விழுக்காட்டுக்கு அதிகமாக இருந்தது; இது 1920களில் 19 விழுக்காடாகக் குறைய ஆரம்பித்தது. சுதந்தரம் அடைய சில வருடம் இருக்கும் வரையில், வடக்கு மாநிலங்களில் 9 விழுக்காடு இருந்த பார்ப்பனர்கள் அரசியலில் பெரும் பங்கு வகித்தனர்.

இந்தக் காலகட்டத்தில் மராட்டியத்தில் அம்பேத்கர் மற்றும் பீகார் மாநிலத்தில் ஜெகஜீவன்ராம் போன்றோர் தங்களது சமுதாய மக்களிடையே பெரும் அரசியல் விழிப்புணர்ச்சியைக் கொண்டு வந்தார்கள். இந்த நிலையில் இஸ்லாமியர்களும் அரசியல் விழிப்புணர்ச்சி பெற ஆரம்பித்தார்கள்.

பாபு ஜெகஜீவன்ராமின் “பார்ப்பனர் அல்லாத இயக்கம்” வலுப்பெற முடியாத நிலையில், உயர்சாதியினர் அந்த இடைவெளியைப் பிடித்துக் கொண்டனர். பார்ப்பனர்களின் ஆதிக்கம் காங்கிரசில் மாத்திரமல் லாது மாற்றுக் கட்சியாக உருவெடுத்த பொதுவுடைமைக் கட்சிகளிலும் பார்ப்பனர்களின் ஆதிக்கம் பெருகத் தொடங்கியது. பிறகு பொதுவுடைமைக் கட்சிகளில் பார்ப்பனர்களின் ஆதிக்கம் சுதந்தரத்திற்குப் பிறகு குறையத் தொடங்கியது.

இன்றைய நிலையில் பொதுவுடைமைக் கட்சிகளின் 4 முக்கியப் பொறுப்புகளில் பார்ப்பனர்களின் ஆதிக்கம் இருப்பதை அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பெரியார் எனும் மாபெரும் சக்தி :

ஆனால் தெற்கே பார்ப்பனர் அல்லாத மாற்று அணி பெரியார் சக்தி மூலம் வளர்ந்துகொண்டு இருந்தது. இந்தத் தாக்கம் தற்போதைய ஆந்திரா, கேரளா மற்றும் கர்நாடக மாநிலத்தில்-பார்ப்பனர் அல்லாத இயக்கம் பிறகு திராவிட இயக்கமாக மாறி, காங்கிரஸ் மற்றும் பார்ப்பனர்களின் எந்த ஒரு இயக்கத்திற்கும் பெருத்த தடையாக உருவெடுத்தது.

சுதந்தரத்திற்குப் பிறகு வடக்கில் சரியான அளவில் பார்ப்பனர் எதிர்ப்பு இயக்கம் வலுப்பெறாத நிலையில், உயர்சாதிக்காரர்களின் ஆதிக்கம் மீண்டும் வளர்ச்சிய டையத் தொடங்கியது.

இன்று பீகார், உத்திரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் எல்லாக் கட்சிகளிலும் பார்ப்பனர் மற்றும் அவர்களுக்கு ஆதரவாகச் செயல்படும் உயர்சாதிக் கட்சியினரின் ஆதிக்கம் உள்ளது. இன்று மெல்ல மெல்ல மாநில முதல்வர்கள் பார்ப்பனர்களின் கைப்பாவைகளாக மாறிக்கொண்டு இருக்கின்றனர். தற்போதைய பாரதிய சனதாக் கட்சி ஆளும் மாநிலங்களில், பார்ப்பனர்கள் குறைந்த அளவில் இருந்தாலும், பார்ப்பனர்களின் ஆளுமை இருக்குமாறு பார்த்துக் கொள் கின்றனர்.

மேலும் தமிழகத்தில் ஜெயலலிதா, மேற்கு வங்கத்தில் மம்தாபானர்ஜி போன்ற நேரடிப் பார்ப்பன முதல்வர்கள் போல், இந்தியா முழுவதும் பல மாநிலத்தில் உள்ளனர். அதே போல் நரேந்திர மோடி, இராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே போன்றோர் பார்ப்பனர்களின் கைப்பாவைகளாக மாறியுள்ளனர்.

இந்திய அரசியல் களத்தில் அவ்வப்போது பெருத்த மாற்றம் ஏற்பட்டுப் பார்ப்பனர்களின் ஆதிக்கம் சரிவடையப் போகும் நேரத்தில் எல்லாம், பார்ப்பனர்கள் தங்களின் ஆதிக்கத்தை நிலைநிறுத்த எந்தவிதத்திலாவது முயன்று கொண்டு இருப்பார்கள்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் விஜய்பகுகுணா ஆட்சி மாற்றம் ஏற்பட்ட போது, அந்த இடத்தில் பார்ப்பனர் ஒருவர் முதல்வராக வரத் தலைமைக்கு அழுத்தம் கொடுக்கும் வேலையில் மூத்த பார்ப்பனப் பெண் அரசியல்வாதி, பிரபலப் பத்திரிகை யாளர் மூலம் இறங்கினார்.

மாற்றம் பெற்றுவரும் அரசியல் களத்தில் பார்ப்பனர் அல்லாத அரசியல் சக்திகள் முன்னேற்றம் பெற்று வந்தாலும், பார்ப்பனர்கள் தங்களின் ஆதிக்கத்தை இழக்கத் தயாராக இல்லை.

சமூக நீதிக்களத்தில் எந்த விதத்திலும் முன்னேற்றம் கொண்டுவிடக்கூடாது என்ற முனைப்போடு அரசியல்களத்தில் பார்ப்பனர்கள் உறுதியாக உள்ளனர். பார்ப்பனர்களின் ஆதிக்கம் குறைந்து வரும் இதுபோன்ற சூழலில் திராவிட இயக்கம் போன்று வலுவான இயக்கம் இந்தியாவெங்கும் உருவாகும் சூழலில் இந்தியாவில் சமூகநீதி மலர்ந்து சமத்துவம் ஏற்படுவது உறுதி.

(நன்றி : ‘தி டைம்ஸ் ஆஃப் இந்தியா’ 21.3.2014

தமிழில் : கலசம்)

Pin It