சிறகடிக்கும் அழிவற்ற பறவை
மலர்ச்சி மிகுந்த வீழ்ச்சியற்ற பூ
தகிக்கும் நிலமும் கொதிக்கும் கடலும்
வீரம் பூத்த காடுகளுமாகி செழித்திருக்க
தேசத்தில் செண்பகப் பறவைகள்
வந்து பூவரச மரங்களில் அமருமா?
காயம் பட்ட குழந்தைகளின்
இரத்தம் படிந்த முகங்களில்
பூக்களின் ஆசைகள் பூக்கின்றன
சந்ததியின் குருதியால்
வரையப்பட்ட சித்திரங்கள் எல்லைகள் மீதிருக்கின்றன
மஞ்சளும் சிவப்புமாக நிலம் பூக்கும்
சருகளுக்குள்ளிருந்து நேராக
முளைத்தெழும்பும் செடிபோல
சாம்பலுக்குள் அணையாது
புகைத்தெழும்பும் நெருப்புப்போல
அழியாது எப்பொழுதுமிருக்கும்
எனது அழகிய தேசம் பறவையைப்போல பூக்கும்.
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
அண்மைப் படைப்புகள்
- ஆரியப் பார்ப்பனியப் பாசிசக் கருத்துகள் பொசுங்கட்டும்!
- குளிரூட்டும் ஆடைகள்
- பெண்களின் சமஉரிமைக்குத் தொடரும் போராட்டம்
- சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக வேண்டும்
- காலம் காட்டும் மேஜிக்
- மாறுவேடம்
- ஜஸ்டிஸ் பத்திரிகையின் நிர்வாகம்
- பா.ஜ.கவின் வீழ்ச்சியை வழிமொழியும் வட இந்தியா!
- பாலாற்று நீரில் தமிழ்நாட்டின் உரிமையைத் தடுப்போம்!
- பத்தாண்டுகளுக்குப் பின் பேரா. சாய்பாபா விடுதலை
சமூகநீதித் தமிழ்த் தேசம் - செப்டம்பர் 2012
- விவரங்கள்
- தீபச்செல்வன்
- பிரிவு: சமூகநீதித் தமிழ்த் தேசம் - செப்டம்பர் 2012