சிறகடிக்கும் அழிவற்ற பறவை
மலர்ச்சி மிகுந்த வீழ்ச்சியற்ற பூ
தகிக்கும் நிலமும் கொதிக்கும் கடலும்
வீரம் பூத்த காடுகளுமாகி செழித்திருக்க
தேசத்தில் செண்பகப் பறவைகள்
வந்து பூவரச மரங்களில் அமருமா?
காயம் பட்ட குழந்தைகளின்
இரத்தம் படிந்த முகங்களில்
பூக்களின் ஆசைகள் பூக்கின்றன
சந்ததியின் குருதியால்
வரையப்பட்ட சித்திரங்கள் எல்லைகள் மீதிருக்கின்றன
மஞ்சளும் சிவப்புமாக நிலம் பூக்கும்
சருகளுக்குள்ளிருந்து நேராக
முளைத்தெழும்பும் செடிபோல
சாம்பலுக்குள் அணையாது
புகைத்தெழும்பும் நெருப்புப்போல
அழியாது எப்பொழுதுமிருக்கும்
எனது அழகிய தேசம் பறவையைப்போல பூக்கும்.
தொடர்புடைய படைப்புகள்
சமூகநீதித் தமிழ்த் தேசம் - செப்டம்பர் 2012
பூக்கும் பறவை
- விவரங்கள்
- தீபச்செல்வன்
- பிரிவு: சமூகநீதித் தமிழ்த் தேசம் - செப்டம்பர் 2012
More articles by தீபச்செல்வன்
- ஈழ நிலத்திற்கான போராட்டம் (02 அக் 2012)
- ஈழ விடுதலை ஒருபொழுதும் மரணமற்ற இலட்சியம்; அது ஒடுக்கப்பட்ட வாழ்வில் பிறந்த கனவு! (16 ஆக 2012)
- சிசுக்கள் வேகும் அடுப்பு...! (05 செப் 2011)
- எங்களை அழித்தது இந்தியா (22 ஆக 2011)
- பெருநிலம் - உன்னைத் தின்று போட்டிருக்கிறார்கள் (23 மே 2011)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.