மறந்து கொண்டே இருப்பது மக்களின் இயல்பு; நினைவுபடுத்தி தூண்டிக் கொண்டே இருப்பது எமது கடமை!

அண்மைப் படைப்புகள்

வானில் இருந்து தூவப்பட்ட நூறு மில்லியன் விதைகள்

02 ஜூலை 2025 சுற்றுச்சூழல்

சூழல் நட்புடன் ஒரு வான் சாகசம். ஸ்கை டைவிங் (Sky diving). ஸ்கை டைவிங் என்பது வானில் விமானத்தில் இருந்து பாராசூட் மூலம் பாதுகாப்பான ஒரு குறிப்பிட்ட உயரம் வரை...

சிகரம் ச.செந்தில்நாதனின் அமர படைப்பு

02 ஜூலை 2025 உங்கள் நூலகம் - ஜூன் 2025

தமிழ் மொழி மற்றும் இலக்கிய வளர்ச்சியில் பக்தி இலக்கியங்களுக்கும் பெரும் பங்குண்டு, மதங்கள் உருவாக்கிய பக்தியும் அவற்றுக்கிடையே நடந்த போர்களும் பல்வகைப்பட்டவை;...

ரொட்டித் துண்டுகள்

02 ஜூலை 2025 கவிதைகள்

நல்ல உறக்கத்தில் சங்கிலி என் கனவினில் வந்து இரண்டு ரொட்டித் துண்டுகளும் கொஞ்சம் தண்ணீரும் கொடு என்றது மறுபேச்சின்றிகுளிர் சாதனப் பெட்டியிலிருந்துஇரண்டு...

தைரியலட்சுமி

02 ஜூலை 2025 கவிதைகள்

பெற்றோரின் பார்வை தாங்காதென்பதால்காதல் மலரை மனதில் மறைத்தாள். கணவனின் கண்கள் பொறுக்காதென்பதால்கவிதைப் பூக்களை கனவில் ஒளித்தாள். புகுந்த வீட்டார் புருவம்...

தஞ்சை ஜில்லா ஆதி திராவிட வாலிபர் மகாநாடு

02 ஜூலை 2025 பெரியார்

தோழர்களே! இன்று இம்மகாநாட்டைத் திறந்து வைப்பது என்னும் முறையில் இந்த மகாநாடு சம்பந்தமாய் நான் ஏதாவது சில வார்த்தைகள் பேச வேண்டும் என்று நீங்கள்...

தமிழிலிருந்து தமிழியல் நோக்கிய பயணம்

30 ஜூன் 2025 உங்கள் நூலகம் - ஜூன் 2025

போரின் வடுக்கள்... தீய்ந்துபோன விழுப்புண்கள்... காணாமல் போதல்கள்... உடல் ஊனமுறுதல்... இழப்பின் துயர் தரும்வலி... போரிலிருந்து மீண்டெழ முடியாதபடியான...

திருப்பூர் நகர 28 சிறுகதைகள்

30 ஜூன் 2025 உங்கள் நூலகம் - ஜூன் 2025

தமிழகத்தின் பல்வேறு மாவட்டத்தைச் சார்ந்த எழுத்தாளர்களின் கதைகளை மாவட்ட வாரியாக தொகுப்பாக்கி வெளியிட்டு வருகிறார் சேலம் பொன் குமார் அவர்கள். உழைப்பும் பணச்...

வள்ளிமலை வரலாறும் வழிபாடும் சமண சிற்பங்கள்

30 ஜூன் 2025 உங்கள் நூலகம் - ஜூன் 2025

வேலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது வள்ளிமலை என்ற இயற்கை எழில் சூழ்ந்த பகுதி. அந்தக் கிராமத்தில் அந்த சிறிய மலைப் பகுதிக்கு அருகே மிகப்பெரிய குளம், அதை ஒட்டிய...

அன்றாட தமிழ் மொழிப் பயன்பாட்டுக்கான சிறந்த கையேடு

30 ஜூன் 2025 உங்கள் நூலகம் - ஜூன் 2025

நீண்ட அனுபவம் பெற்ற ஒரு நல்ல தமிழாசிரியர் என்பதோடு மட்டுமல்லாது, நமது தமிழ் மொழியையும், அதன் இலக்கிய இலக்கண வளங்களையும் வெவ்வேறு தளங்களில் மிகச் சிறப்பாகப்...

குயிலனின் முச்சந்தியில் மூதறிஞரும் ஈ.வெ.ராவும்

30 ஜூன் 2025 உங்கள் நூலகம் - ஜூன் 2025

தமிழிலக்கியப் பெரும்பரப்பில் 1939இல் தொடங்கி 2002 வரைக்குமான காலவெளியில் அசாத்தியப் பல்திறப் படைப்பாளியாகத் திகழ்ந்தவர் கவிஞர் குயிலன் என்ற கு.இராமலிங்கன்....

ஒரு நூற்றாண்டுப் பெண்களின் கதை

30 ஜூன் 2025 உங்கள் நூலகம் - ஜூன் 2025

எழுத்தாளர் அகிலாவின் இரண்டாவது நாவல் ‘அறவி.’ இவர் ஏற்கெனவே ‘தவ்வை’ என்றொரு நாவல் எழுதியுள்ளார். மனநல ஆலோசகராகப் பணியாற்றுகிறார். இந்தப் பணி அனுபவம்தான் ‘அறவி’...

அரோகராவுக்கு ஆசைப்படும் பாரத மாதா

30 ஜூன் 2025 கவிதைகள்

மாநிலத்துக்கு மாநிலம் மாற்றுப் பெயர்களில்அவாதாரமெடுத்தகடவுளுக்கு நோக்கம்எதுவாகவும் இருக்கலாம்.பக்தாளுக்குஒரே நோக்கம் தான்...அடிமைகளைத் தூண்டிமத வெறுப்பில்...

மனங்கள்

30 ஜூன் 2025 கவிதைகள்

தெருக்கோழிகளின் பழுப்பு நிறசவ்வு கால்களுக்கு ஒப்பானவைநம் மனங்கள் எச்சிலின் மீது நின்று கொண்டுநட்சத்திரங்களைக் கொத்தி விளையாடிக் கொண்டிருக்கும் ஒரு பாடை...

சாயம் வெளுத்தது - ஹரிஜன சேவைப் புரட்டு

30 ஜூன் 2025 பெரியார்

"இந்து சமூகத்தில் உள்ள தீண்டாமை என்னும் கொடுமையை அடியோடு ஒழித்தாலல்லது இந்தியாவுக்கு சுயராஜ்யம் கிடைக்காது" "தீண்டாமை ஒழிப்பதற்கு முன் சுயராஜ்ஜியம்...

‘மனிதத்தை' போற்றுவோரே கடவுள், மத மறுப்பாளர்கள்

27 ஜூன் 2025 பெரியார் முழக்கம் - ஜூன் 2025

உலகப் புகழ் பெற்ற வரலாற்று ஆசிரியர் யுவால் நோவா ஹராரி. இஸ்ரேலில் பிறந்தவர் இப்ரு பல்கலைக்கழக பேராசிரியர். மனித குல வரலாறு, வருங்கால வரலாறு, என்று அவர் எழுதிய...

கீற்றில் தேட...

mulachiparambu murali paintings

முன்னோடி வழக்கறிஞர் லஜபதிராய் அவர்கள், மார்பகத்திற்கு வரியும் அதனை மூடி மறைப்பதற்கு வரியும், விதித்த வரலாற்றை தன்னுடைய கட்டுரையில் விரித்துரைத்துள்ளார்கள்.

அண்மையில் ஓர் அரிய வரலாறு கண்டறியப்பட்டுள்ளது. அது ஆட்சியாளர்கள் மார்பக வரியை வசூலிப்பதில் காட்டிய வேகத்தையும், ஆதிக்க ஜாதியினரின் இந்த வரியை எதிர்த்த வீராங்கனையின் வரலாறும் ஒன்று போலவே உலகறியச் செய்தது.

இந்த வரலாற்று நிகழ்வு நடந்தது வழக்கறிஞர் லஜபதிராய் அவர்கள் குறிப்பிடும் அதே திருவிதாங்கூர் இராஜியம்தான்.

நடந்த காலம் சுமார் 100 ஆண்டுகளுக்கு முன். இடம் திருவிதாங்கூர் இராஜ்யம், நாங்கிலி கிராமம், சேர்த்தலா வட்டம். இப்போது கேரள மாநிலத்தில் இருக்கின்றது. ‘நாங்கிலி’ என்ற சொல்லுக்கு ‘அழகு’ எனப் பொருள். ‘நாங்கிலி’ என்பது தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த ஒரு பெண்ணின் பெயர்.

இவர் முப்பது வயதை அடைந்த அழகிய மாது. ஒரு கட்டத்தில் இவர் தன்னடைய மார்பகத்திற்கு விதிக்கப்பட்ட வரியைச் செலுத்துவதில்லை என உறுதி கொண்டாள். ஆனால், திருவிதாங்கூர் இராஜ்யத்தின் உயர்ஜாதி ஆட்சியாளர்கள் விடுவதாக இல்லை.

தொடர்ந்து மார்பக வரி வசூலிப்பவர்களை நாங்கிலியின் வீட்டுக்கு அனுப்பி வரியைச் செலுத்தக் கட்டாயப்படுத்தினார்கள். ஆனால், அழகி நாங்கிலி இந்த வரியைச் செலுத்துவதை மிகப் பெரிய அவமானமாகக் கருதினார். அதனால் மார்பக வரியை தருவதில்லை என்ற தனது உறுதியில் தளராமலிருந்தாள்.

இந்த மார்பக வரிக்கு மலையாள மொழியில்  முலைக்கர்ணம் என்று பெயர்.

தொடர்ந்து வரியைக் கட்டிட அவள் மறுத்து வந்ததால் வரி பாக்கி அதிகரித்துக் கொண்டே சென்றது. மார்பகம் பெரியதாக இருந்ததால் வரியும் அதற்குத் தகுந்தாற் போல் அதிகமாக இருக்கும். அழகியின் மார்பகங்கள் பெரியவை. அதனால் விதித்த வரியும் அதிகம்.

‘முலைக்கர்ணம் பார்வத்தியார்’ அதாவது மார்பக வரியை வசூல் செய்யும், பார்வத்தியார் ஒரு நாள் நாங்கிலியை தேடிப் போய்விட்டார்.

நாங்கிலி தன் வீட்டுக்கு வந்த அவரை, சற்றுப் பொறுங்கள் இதோ வரித் தொகையோடு வருகின்றேன் என்று வீட்டிற்குள் சென்றாள்.

ஓர் வாழை இலையை எடுத்து விரித்தாள். விளக்கொன்றை ஏற்றி வைத்தாள். தன் மார்பகங்களை ஒவ்வொன்றாக அறுத்து வைத்தாள். அப்படியே சாய்ந்து இறந்தாள்.

மார்பக வரியை வசூலிக்க வந்த பார்வத்தியாருக்கு இந்த மார்பகங்களைத் தந்தாள். மார்பக வரிக்கு எதிராகத் திப்பு சுல்தானின் கடும் நடவடிக்கைகளுக்குப் பின், அது சமுதாயத்தில் ஒழிக்கப்பட்டது.

நூறு ஆண்டுகளுக்கு முன் அழகி நாங்கிலி அறுத்து வைத்த மார்பகங்கள் தாம் ‘முலைவரி’ என்ற மார்பக வரிக்கு எதிராக எழுந்த முதல் எதிர்ப்பலை என்பது வரலாற்று ஆய்வாளர்களின் கருத்து.

இந்த அதிர்வான நிகழ்ச்சிக்குப் பின் அவள் வாழ்ந்த இடம் ‘முலைச்சிபரம்பு’ (மார்ப்கப் பெண் வாழ்ந்த இடம்) என்றே வழங்கப்பட்டது.

பின்னர் இந்த போராட்ட வரலாற்றை வரலாற்றுச் சுவடுகளிலிருந்து மறைத்திட விரும்பினார்கள் ஆதிக்க ஜாதியினர். அதனால் அந்த இடத்தை ‘முலைச்சிபரம்பு’ என்பதற்குப் பதிலாய் ‘மனோரமா காவலா’ என மாற்றினார்கள்.

ஆனால், அவள் வாழ்ந்த அந்த ஓலைக்குடிசை இடிபாடுகளுடன் அதே இடத்தில் இருக்கின்றது. முரளி என்ற ஓவியர் இந்த வரலாற்றைச் சித்திரமாகத் தீட்டி அந்த இடத்தில் வைத்திருக்கின்றார். அந்த ஊர் மக்கள் ஒவ்வொருவரும் “நாங்கள் இந்த வரலாற்றை செவி வழி செய்தியாகக் கேட்டு வளர்ந்தோம். இப்போது எங்கள் உள்ளக் கிடக்கையை அப்படியே சித்திரமாக வரைந்துள்ளார் முரளி’’ என அவரை பாராட்டுகின்றார்கள்.

இந்த இடம், இடம்பெறும், சேர்த்தலாதான் முன்னாள் இராணுவ அமைச்சர் ஏ.கே.அந்தோணி அவர்களின் சொந்த ஊர்.

இந்த வரலாறு பேணப்பட வேண்டும், அழகி நாங்கிலிக்கு நினைவிடம் ஒன்றும் எழுப்பப்பட வேண்டும் என்பது அந்த மக்களின் வேண்டுகோள்.

(நன்றி - டைம்ஸ் ஆஃப் இந்தியா, 7.3.2016)

- மஞ்சை வசந்தன்