கீற்றில் தேட...
அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- முல்லைத் தமிழ்
- பிரிவு: தொழில்நுட்பம்
இன்றைய அறிவியல் உலகம் தகவல் தொடர்பு தொழில் நுட்பங்களின் மூலம் மிக உன்னதமான பிணைப்பை உலக மக்களிடையே எளிமையாக்கிவிட்டது.
கண்ணிமைக்கும் நேரத்தில் கடல் கடந்து பறக்கும் குரல் ஒலிகளின் ஒப்புயவர்வற்ற செயல்பாடுகளுக்கு செல்பேசி முக்கிய பங்காகிவிட்டது. காடுகள் மேடுகள் எல்லாம் உழைத்து களைத்துப்போன ஏழைமக்கள் வாழும் குடிசைப்பகுதிகளின் சந்து பொந்துகளிலெல்லாம் சந்தடியில்லாமல் நுழைந்து சாகசம் படைத்து அவர்தம் வாழ்க்கைத் தொடர்பை வலுவாக்கி வருவதும் செல்பேசிகளே. செல்போன்களின் சேவைகள் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே செல்கின்றன. 2005 - ஆண்டு கணக்கெடுப்பின்படி உலகில் இதனை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 126 கோடியாக இருந்தது என்றும் அது, நாளொன்றுக்கு 46000 பேர் வீதம் புதிதாக அதிகரித்து வருவதாகவும் கணக்கிட்டுள்ளனர்.
இங்ஙனம் பரவிவரும் செல்பேசிகளின் பயன்பாடுகள் உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் கேடுகள் விளைவிக்கின்றன என்பதனை சமீபத்திய அறிவியல் ஆய்வுகள் தெளிவுபடுத்தி உள்ளன. இயற்கையின் இயற்கையான கதிர்வீச்சுகளிடையே அறிவியல் கண்டுபிடிப்புகளாகிய ஒயர்லெஸ், ரேடியோ, டிவி, ரேடார், செல்போன்கள் இவைகளின் இயக்கத்தால் வெளிவிடப்படும் ரேடியோ அலைகள், கதிரியக்க அதிர்வுகள், நுண்ணலை அதிர்வுகள், நுண்ணலை கதிர்வீச்சுகள் போன்றவை உயிர்களின் மீது பல்வேறு தீயவிளைவுகளை உருவாக்கி வருகின்றன. இதில் இன்றைய செல்பேசிகளே அபரிமிதமான விளைவுகளை ஏற்படுத்துகின்றன என்பதனை அறிய முடிகிறது.
இதுபோலவே செல்பேசி "டவர்களும்" மிகவும் ஆபத்தானவை தான். அவற்றிலிருந்து வரும் பாதுகாப்பற்ற நுண்ணலை கதிர்வீச்சுகளில் சுமார் 60%, தலைப்பகுதிகளில் கிரகிக்கப்பட்டு, கொஞ்சம் மூளையினுள் ஊடுருவி செல்வதாக கண்டறிந்துள்ளனர்.
சிறுகுழந்தைகள் செல்பேசிகளை பயன்படுத்துவது மிகவும் பாதிப்பான விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதனையும் பிரிட்டீஷ் தேசிய கதிரியக்க பாதுகாப்புக்கழகம் ஆய்வுகள் மூலம் கண்டறிந்துள்ளது. பெரியவர்களைவிட குழந்தைகளை 3.3 மடங்கு கதிர்வீச்சுகள் அதிகமாக பாதிக்கின்றன என்றும், குழந்தைகளின் மண்டைஓடுகள் மிகவும் மெல்லிய தன்மையுடையதாக இருப்பதால் அவை ஆபத்தான கதிர்வீச்சுகளினால் எளிதாக பாதிக்கப்படுவதால் 30 முதல் 40 வயதிற்குள் பெரும்பாலோருக்கு மூளைக்கட்டிகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன என்றும் உறுதிபடுத்தியுள்ளனர்.
செல்பேசிகளின் தீயவிளைவுகள் பற்றி பல்வேறு நாட்டைச் சேர்ந்த அறிவியல் அறிஞர்களின் தீவிர ஆய்வுகளில் பல உண்மைகள் வெளியாகி உள்ளன.
இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த "ராப்பாபோல்ட் மருத்துவ அறிஞர்கள் அமைப்பு" செல்பேசி கதிர்வீச்சுகளை விலங்குகளில் பரிசோதனை செய்ததில் அவற்றின் கண்கள் வெகுவாக பாதிக்கப்படுவதாக கண்டறிந்துள்ளனர். கண்களுக்கு அருகில் செல்பேசி கதிர்வீச்சு செல்லும்போது வெப்பநிலை சுமார் 3டிகிரி செல்சியஸ் அதிகரிப்பதால் கண்புரை நோய்கள் எளிதில் (Cataract) உருவாவதனை கண்டுபிடித்துள்ளனர்.
அமெரிக்க அறிவியலறிஞர்கள் மேற்கொண்ட பல்வேறு ஆய்வுகளின்படி செல்பேசி பயன்படுத்துபவர்கள் பெரும்பாலோர் ஆண்மைக்குறைவு, விந்தணுக்குறைவு, மகப்பேறின்மை போன்ற ஆபத்திற்குள்ளாவதை கண்டுபிடித்துள்ளனர். இந்தியாவில் மும்பையைச் சேர்ந்த மருத்துவ அறிஞர்களும் பல்வேறு ஆய்வுகள் மூலம் இதை தெளிவுபடுத்தியுள்ளனர். சாதாரணமான மனிதர்களைவிட நாள்தோறும் குறைந்தபட்சம் நான்கு மணிநேரம் செல்பேசிகளை பயன்படுத்துவோரின் விந்தணு எண்ணிக்கை 25% குறைவாகவே காணப்படுவதனை அறிவியல் ஆய்வுகள் தெளிவுபடுத்தி உள்ளன.
அமெரிக்க ஓஹியோவின், கிளீவ்லேண்ட் இனப்பெருக்க மருத்துவ ஆய்வு மையத்தின் இயக்குநர் பேராசிரியர் அசோக் அகர்வால் விலங்கினங்களில் மேற்கொண்ட ஆய்வுகளின்படி விந்தணுக்களை உருவாக்கும் செல்கள் மின்காந்த கதிர்வீச்சுகளினால் அல்லது அதனால் ஏற்படுத்தப்படும் வெப்பத்தினால் பாதிக்கப்படுவதனை கண்டறிந்து வெளியிட்டார். செல்பேசிகளை இடுப்பு பகுதியில் வைத்திருப்பவர்களின் அடிவயிறு, தொடையிணைப்பு பகுதிகள் எளிதில் சூடாவதும் இத்தகைய பாதிப்புகளுக்கு காரணமாகும்.
அன்னாள் நரம்பியல் ஆய்வுகளும், டாக்டர் பாவ்லோ ரோஷினியின் ஆய்வுகளும் செல்பேசி கதிர்வீச்சுகள் மூளைசெல்களை தூண்டுகின்றன என்பதனை வெளிப்படுத்தியுள்ளன. இத்தகைய தூண்டுதல்கள் காக்கைவலிப்பு போன்ற விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என தெரிவித்துள்ளார்.
சுவீடன் தேசிய உழைப்பாளர் வாழ்வு மையம் வெளியிட்டுள்ள ஆய்வாளர்களின் அறிக்கையின் படி 2000 மணி நேரத்துக்கு மேல் செல்பேசியை பயன்படுத்திய 905 முதியவர்கள் மூளைப்புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதனை வெளிப்படுத்தியுள்ளனர். சாதாரணமாக செல்பேசி பயன்படுத்தாதவர்களை விட 3.7 மடங்கு அதிகமாக செல்பேசி பயன்படுத்துவோர் பாதிக்கப்படுகின்றனர் என்பதையும் ஒப்பிட்டுள்ளனர்.
இலண்டன் புற்றுநோய் ஆராய்ச்சி மையம் - மூன்று பிரிட்டிஷ் பல்கலை கழகங்களுடன் சேர்ந்து நான்கு ஆண்டுகளாக மேற்கொண்ட ஆய்வு முடிவுகள் படி அதிக செல்பேசி பயன்பாடு உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பதை கண்டறிந்துள்ளனர்.
எனவே செல்பேசி பயன்படுத்துவோர் குழந்தைகளிடம் செல்பேசிகளை கொடுப்பதை தவிர்க்கவும்.
செல்பேசி வைத்திருப்போர் கவனத்திற்கு :
பேசும்போது உடலுக்கு சற்று தொலைவில் வைத்து பேசுவதும், வாய்ப்புகள் உள்ளபோது சாதாரண தொலைபேசிகளை பயன்படுத்துவதும். வாகனங்களில் செல்லும்போது கண்டிப்பாக செல்பேசி தொடர்புகளை தவிர்ப்பதும், அதிகமாக சூடாகும் வரை பேசுவதை தவிர்ப்பதும். செல்பேசி பயன்படுத்துபவருக்கு மிகவும் பாதுகாப்பானதாகும்.
(நன்றி : புதிய தென்றல் ஆகஸ்ட் 2007)
- விவரங்கள்
- முனைவர் க.மணி
- பிரிவு: தொழில்நுட்பம்
மண்டை ஓட்டுக்குக் கீழே, மூளையின் பரப்பில் பட்டானி அகலத்திற்கு எலெக்ட்ரானிக் சிப்பங்களைப் பதிக்கும் அறுவைச் சிகிச்சைகள் பரவலாகிக் கொண்டு வருகிறது. பார்க்கின்ஸன், டிஸ்டோனியா போன்ற மூளை நரம்பு சம்மந்தப்பட்ட நோய்களைக் குணப்படுத்த இத்தகைய சிப்பங்கள் மூளையில் பதிக்கப்படுகின்றன. இதன் உதவியால் தக்க அளவு மின்தூண்டலை வேண்டும்போது வழங்குவதன் மூலம் நரம்பு சம்மந்தமான நோய்களுக்கு நிவாரணம் கிடைக்கிறது.
கட்டுப்பாடில்லாமல் அதனிஷ்டத்திற்கு நரம்புசெல்கள் துடிப்பதால் உடல் அஷ்டக் கோணல்களாக முறுக்கிக் கொள்ளும் நோய்க்கு டிஸ்டோனியா என்று பெயர். இந்நோயை சிப்பத்தைப் பதிப்பதின் மூலம் மிக எளிதில் சமாளித்துவிடலாம். மிதமான மின்தூண்டலை, குறிதவறாமல் நரம்பு செல்களுக்கு வழங்குவதன் மூலம் மனநோய், மையநரம்பு மண்டலப் பிரச்சனைகள் போன்றவற்றைச் சரிப்படுத்தலாம். ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழக நரம்பியல்துறை மூளையின் ஆழத்தில் சிப்பங்களைப் பதிக்கும் அறுவைச் சிகிச்சைகளைப் பற்றி ஆய்வு செய்துவருகிறது. இது வெற்றி பெற்றால், நினைவாற்றலை அதிகப்படுத்தலாம், தீய பழக்கங்களை மறக்கடிக்கலாம்.
மூளையில் "இன்ப மையம்' என்றொரு இடம் இருக்கிறது. அந்த இடத்தைத் தூண்டினால் மனதில் திருப்தியும் மகிழ்ச்சியும் ஏற்படும். இதைப்பற்றி 2008 இல் " Pleasure center" என்றொரு நூல் வெளிவந்தது. எழுதியவர் அஸிஸ் என்பவர். பணம் பணமென்று அலைந்து வாழ்க்கையின் சுவாரசியமான காலங்களை இழக்கும் வாலிப வயோதிகர்களுக்காக "இன்பம் தூண்டும்" சிப்பங்களை வடிவமைக்க ஆக்ஸ்ஃபோர்டு பல்கலை முயன்றுவருகிறது.
ராபர்ட் ஹீத் என்றொரு சைக்கியாட்ரிஸ்ட் 1960 இல் ஒரு வினோத அறுவைச்சிகிச்சை செய்தார். ஓரினச்சேர்க்கைப் பிரியரான "கே' ஆணின் மூளையில் (ஆ19 பரிசோதனை என்று அதற்குப் பெயரிட்டார்) மின் தூண்டலை தேவைப்படும்போது வழங்கியதும் அவரது ஆவல் தணிந்ததாம். அதன்பிறகு அவரைப்பற்றி எந்த தகவலும் இல்லை. இப்போதைய "ஹைடெக்" தொழில் நுட்பம் சிப்பம் பதிக்கும் சிகிச்சையை 95 சதம் வெற்றிக்கு இட்டுச்செல்லும் என நம்பலாம்.
தக்க புள்ளியல் மின்தூண்டலை "லேப்" செய்தால் உள்ளத்தில் பேரின்பம் பெருக்கெடுக்கும். செக்ஸ் - சர்க்யூட் - சிப்பங்கள் தயாராகிக் கொண்டுள்ளன.
- முனைவர் க.மணி
- விவரங்கள்
- பிச்சுமணி
- பிரிவு: தொழில்நுட்பம்
உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையின்படி தற்போது ஆண்டுக்கு 7.9 மில்லியன் மக்கள் புற்றுநோயால் மரணமடைகிறார்கள் என்றும், இது 2030 ஆண்டில் ஆண்டுக்கு 12 மில்லியன் மக்களாக உயரும் என்றும், தற்போது ஆண்டுக்கு 11.3 மில்லியன் மக்கள் புதிதாக புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார்கள் என்றும், இது 2030ம் ஆண்டில் 15.5 மில்லியனாக உயரும் என்றும் தெரிவித்து உள்ளது.
இரத்த ஆய்வு வாயிலாக இரத்தில் உள்ள கொழுப்பு, சர்க்கரை அளவுகளை அறிவது போல, நமது மரபணுக்களை சாதரணமான பார்வையில் ஒருவருக்கு புற்று நோய் வருங்காலத்தில் வர வாய்ப்பு உள்ளதா என முன்னதாகவே கண்டறியும் புதிய முறை ஒன்று சில ஆண்டுகளில் நடைமுறைக்கு வந்துவிடும்.
மேரிலாண்ட் பலகலைகழகம் விஞ்ஞானி கே.ஜெ.ரேய் லியின் எண்ணியல் குறியிடு பகுப்பாய்வு முறை (Digital signaling processing techniques) மூலம் மரபணுக்களிலிருந்து தகவல்களைப் பெற்று, அதில் ஏற்படும் மாற்றங்களைக் கொண்டு புற்றுநோய் வர வாய்ப்பு உள்ளதா என நமக்குத் தெரிவிக்கும். புற்றுநோய் ஏற்படும்போது புற்றுபாதிக்கப்பட்ட செல்கள் முற்றிலும் மாறுபட்ட புரதத்தையும் மூலக்கூறுகளையும் வெளியிடும் இவைதான் இந்நோய்க்கான முன்அறிகுறியாகும்
கே.ஜெ.ரேய்-லியின் உயிரியல்குறியிடுகள் செல், மூலக்கூறுகள், மரபுமுறைகள் ஆகியவற்றில் ஏற்படும் மாற்றங்களை காண்பிக்கும். புற்றுநோயை உருவாக்கும் உயிரியல்குறியிடுகளை சரியாக நாம் கணிக்க இயன்றால் இந்நோய் வருவதை முன்கூட்டியே கண்டறியலாம். பரிசோதிக்கலாம், மருத்துவம் செய்யலாம்.
மேரிலாண்ட் பலகலைகழக விஞ்ஞானி கே.ஜெ.ரேய் லி என்பவர் கண்டுபிடித்து உள்ள குறுமஅமைப்பு(MICRO ARRAY TECHNOLOGY) முறை, மரபணுவில்(DNA) உள்ள பொறுக்கப்பட்ட(random) உயிரியல் விவரங்களை கணினி படிக்கதக்க உணர்தகவல்களாக மாற்றி தரும். அவரது குழு சார் முறை (ensemble dependence model) மரபணு தகவல்களை அல்லது புரதத்தை (mass spectrograph)மாஸ் ஸ்பெக்டரோகிராப் வாயிலாக உயிரனுக்கும் புரதத்துக்கும் உள்ள தொடர்பு ஆராய்ந்து, வித்தியாசமானவைகளை குழுவாக பிரித்து (different cluster ) பார்க்கிறது. மேலும் அவைகளின் நடத்தை (behaviour) மற்றும் ஒருங்கான செயல்பாடுகளை (interaction) ஆய்வு செய்து பார்க்கிறது. ஒவ்வொரு குழுவுக்கும் குறிப்பான உயிரணுவும் அவற்றிடைய திட்டவட்டமான உறவும் இருக்கும்.
இந்த கே.ஜெ.ரேய் லி சார்பு முறையை கொண்டு சாதாரணமானவைகளையும் புறறு பாதித்த மாதிரிகளை வகைபடுத்த முடியும். அதற்குப்பின் இது உண்மை புற்றுநோய் தகவல்களுடன் ஒப்பிட்டு, புற்றுநோய்க்கான உயிரியல் குறிப்புகளை (cancer biomarkers) கண்டறிகிறது.. கே.ஜெ.ரேய் லி சார்பு முறை உடல்நலத்துக்கும், உயிரணு உணர்ச்சி பட்டியலுக்கும்(global gene expression profile) உள்ள தொடர்புகளை கண்டுஅறிகிறது. இதன் மூலம் நுரையீரல், மார்பகம் கருப்பபை, புரஸ்டட் ஆகியவற்றில் புற்று நோய் உருவாகும் வாய்ப்பை 98 விழுக்காடு சரியாக கணிக்க உதவும். இந்த முன்னதாக புற்றுநோய் கண்டறியும் முறை இன்னும் 10 அல்லது 20 ஆண்டுக்குள் நடைமுறைக்கு வந்துவிடும். இன்னும் 5 அல்லது 10 ஆண்டுக்குள் வழக்கத்தில் உள்ள உயிரியல்முறை பரிசோதனைக்கு துணையாக எண்ணியல் பரிசோதனை (Digital testing)முறை நடைமுறைக்கு வந்துவிடும்.
நன்றி: the institute monthly
கூடுதல் விவரங்களுக்கு: www..ieee.org/theinstitute
அனுப்பி உதவியவர்: பிச்சுமணி
- விவரங்கள்
- முனைவர் க.மணி
- பிரிவு: தொழில்நுட்பம்
கொத்து மல்லி, லவங்கம் போன்ற வாசனைப் பொருள்களைப் பயன்படுத்தி பூச்சிக்கொல்லி மருந்தினை முர்ரே இஸ்மான் (பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகம்) என்பவர் தயாரித்திருக்கிறார்.
வாசனை திரவியங்களில் இருக்கும் எஸ்ஸென்சியல் ஆயில் எனப்படும் வாசனை எண்ணெய்கள் பூச்சிகளை, புழுக்களை, லார்வாக்களை அவற்றின் முட்டைகளை கொல்லக்கூடியன. இவற்றைப் பூச்சிக்கொல்லி மருந்துகளாகப் பயன்படுத்துவதில் புத்திசாலித்தனம் இருக்கிறது. முதலில் இவற்றைப் பயன்படுத்துவதற்கு சட்டபூர்வமான அனுமதி வாங்குவது சுலபம். ஏனெனில், இவை மனிதர்களுக்கு ஊறு விளைவிக்காதவை என்பது ஏற்கனவே தெரிந்தது. இரண்டாவது இது செயற்கை பூச்சிக்கொல்லி மருந்துகளைவிட இயற்கைக்குப் பாதுகாப்பானது. எது இயற்கைக்குப் பாதுகாப்பானதோ அது மனிதனுக்கும் பாதுகாப்பானது என்பது உண்மை.
பூச்சிகள் சீக்கிரமே மருந்துகளுக்கு சமாளிப்புத் தன்மைகளைப் பெற்றுவிடுவதால், செயற்கை மருந்துகளை அடிக்கடி மாற்ற வேண்டியுள்ளது, அந்தப் பிரச்சனை இயற்கை மருந்துகளுக்குக் கிடையாது. இதில் சில சிக்கல்களும் இருக்கின்றன. செயற்கை மருந்துகளை ஒருதரம் தெளித்தால் ஒருமாதத்திற்கு கவலையில்லாமல் இருக்கலாம்; இயற்கை மருந்துகளை அடிக்கடிப் பயன்படுத்த வேண்டியிருக்கும். சீக்கிரமே ஆவியாகி இவை காற்றில் கரைந்து விடுவதே காரணம். இதை ஏதாவது ஒரு முறையில் தடுக்க முடிந்தால் இயற்கை மருந்துகளுக்கு ஈடு இருக்காது.
- முனைவர். க. மணி, பயிரியல்துறை. பி எஸ் ஜி கலை அறிவியல் கல்லூரி. கோயம்புத்தூர்
- சோப்பு வேண்டாம் தண்ணீரில் முக்கி எடுத்தால் போதும்!
- கூந்தல் வேர்களும் அதிசய மருந்துகளும்
- மூலக்கூறுகளை வருடும் மைக்ராஸ்கோப்
- தன்கையே தனக்கு எதிரி
- மரத்திலிருந்து பிளாஸ்டிக்
- பார்வையற்றவர்கள் ஓட்டுவதற்கு கார்
- வளையும் ஒலிபெருக்கி
- மூளை வளருகிறது - நாம் தான் அதை தடை செய்கிறோம்
- நேனோ ரேடியோ - தூசி தட்டினால் பாட்டு நின்று விடும்
- மூளை சொல்படி நகரும் சக்கர நாற்காலி
- கெமிஸ்ட்டுகளின் பொறாமை
- பாதிப்பை ஏற்படுத்தும் பாதரசம்...
- கைடு வேலை பார்க்கும் ரோபோ
- மருந்துப் பொருள் மாசுகளால் நடத்தை மாறும் மீன்கள்
- இதயத்திற்காக மரங்கள்
- செயற்கை வெளிச்சமும் ஒரு மாசே
- காட்டுத் தீயும் செயற்கை நுண்ணறிவும்
- அல்சைமர்ஸ் நோயை அதிகரிக்கும் ஒளி மாசு
- பத்து டிரில்லியன் டாலர் பயன் தரும் உணவுமுறை மாற்றம்
- கடலுள் மூழ்கும் நிலப்பகுதிகள்: காவிரிப் படுகையின் நிலை என்ன?